Menu
Your Cart

எறும்பு

எறும்பு
-5 %
எறும்பு
கணேசகுமாரன் (ஆசிரியர்)
₹105
₹110
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தான் யார் என்னும் கேள்வியில் களைத்துப் போயிருக்கும் சிலுக்கு, தனக்கிருக்கும் பிரச்சனைகள் குறித்துப் பேச மறுக்கும் வரதன், இந்த இரவைக் கடக்க முடியாமல் சிக்கித் தவிக்கும் பரோட்டா பிரியன் என இத்தொகுப்பில் இருக்கும் யாரொருவருக்கும் ஏதோவொரு பிரச்சனை. இந்தப் பிரச்சனைகளுக்கான தீர்வென எதுவுமே இன்றி அவர்தம் இயல்பிலேயே அவர்களின் வாழ்வில் சில அத்தியாயங்களை நாம் படித்துவிட்டு கட்டிலில் கிடத்தப்பட்டிருக்கும் கதை மாந்தர்களைக் கடந்து ஊர்ந்து செல்லும் எறும்பைப் போல் பக்கங்களைக் கடக்க வேண்டியதிருக்கிறது. எந்தக் கதையும் பத்து நிமிடத்துக்கு மேல் நம்மை வாசிக்க வைத்து சோதிப்பவையல்ல. அதே சமயம் அந்த நிர்வாண மனிதர்களின் அழுக்குகளை நம் முன் காட்சிப்படுத்த அவை தவறுவதில்லை. ஆண்களுக்கு ஏன் மார்புகள் என்பது கேள்வியாய் ஒரு கதையில் தொக்கி நிற்கிறது. ஃபேன்டசி பயணம் எடுக்கும் பதினொன்றாம் நாள் கதைகூட இறுதியில் மனப்பிறழ்வை நோக்கி நம்மை இழுத்துச் செல்கிறது.
Book Details
Book Title எறும்பு (Erumbu)
Author கணேசகுமாரன் (Kanesakumaaran)
Publisher Zero degree/எழுத்து பிரசுரம் (Zero degree/Ezhuthu Pirasuram)
Published On Dec 2021
Year 2022
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மெனிஞ்சியோமா - கணேச குமாரனின் குறுநாவலான, இந்த புத்தகம் பயணிக்கும் வெளி புதியது. நோய்மை, இருண்மை என்று மருத்துவமனையின் முனகல்களோடு வலியை வாசகனுக்குக் கடத்துகிறது இந்நாவல்...
₹76 ₹80
இந்த நாவலை வாசிக்கும்போது கதையின் நாயகன் குமரன் வேறல்ல நாம் வேறல்ல என்கிற எல்லை பலருக்கு குறுகிக் கொண்டே வருவது தெளிவாகும். அவரது சிறுகதைகளில் இருக்கும் மொழி ஆளுமை நாவலில் இல்லாது எளிய மொழியில் உரையாடல்களாய் பின்னி இருக்கிறார். அவரது கதைகளுக்கான களம், உளவியல் சார்ந்த அவருடைய கதைகள் தமிழ் இலக்கியத்தி..
₹105 ₹110
சுயகொலைகள் நாம் நிகழ்த்துவதன்று. நம் சுயத்தினைக் கொலை செய்யும் இச்சமூகம். தற்கொலை முயற்சிகள் ஓரளவு வெற்றியைக் கொடுக்கும். முயற்சி என்பதிலிருந்தே புரிந்துகொள்ளலாம். தோல்வியில் முடியும் பெரும்பாலான தற்கொலைகள் உன்மத்த உலகில் சஞ்சரிக்க வைக்கும். எண்ணிப்போட்டால் சாகமுடியாது. அள்ளிப்போட வேண்டும். உள்ளங்கை..
₹124 ₹130