Menu
Your Cart

பதிற்றுப்பத்து (ஔவை சு.துரைசாமிப் பிள்ளை)

பதிற்றுப்பத்து (ஔவை சு.துரைசாமிப் பிள்ளை)
-5 %
பதிற்றுப்பத்து (ஔவை சு.துரைசாமிப் பிள்ளை)
₹428
₹450
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
“இவ்வுரை இல்லையாயின், இந்நூற் பொருளை இக்காலத்தில் அறிந்துகொள்ளுதல் மிக அரிது'' என அவர்களே உரைத்திருப்பது காண்க. ஏடுகளில் உரைகாரர் பெயர் குறிக்கப்படாமையின் அவர் இன்னாரென்று அறிவது இயலாதாயிற்று. ஆயினும், அவர் நேமிநாதம் செய்த குணவீர பண்டிதர் காலத்துக்குப் பிற்பட்டவரென்பது ஒருதலை. பதிற்றுப் பத்தின் உரையில், சில்லேராளரென்றவிடத்துச் “சின்மையைச் சின்னூல் என்றதுபோல ஈண்டுச் சிறுமையாகக் கொள்க" (பதிற். 76.11) என்றவிடத்து உரைகாரரால் சின்னூல் எனப்படுவது குணவீர பண்டிதர் எழுதிய நேமிநாத மென்னும் இலக்கண நூலுக்குப் பெயர். இவ்வண்ணம் பாட்டும் உரையுமாகக் கிடைக்கும் இப்பதிற்றுப்பத்து, முதற் பத்தும் பத்தாம் பத்தும் இன்றி இடைநின்ற எட்டுப் பத்துக்களே கொண்டுள்ளது. கிடைக்கும் ஏடுகள் பலவற்றினும் முதற் பத்தும் இறுதிப் பத்தும் காணப்படவில்லை. பாட்டும் உரையும் கொண்ட ஏடொன்றில், ஒன்பதாம் பத்தின் இறுதியில், “பதிற்றுப்பத்து மூலமும் உரையும் முடிந்தது; சுபமஸ்து'' என்று காணப்படுகிறது. மூலமேயுள்ள ஏடுகளும் ஒன்பதாம் பத்தோடே முடிகின்றன. இவ்வாறே தொடக்கமும் இரண்டாம் பத்தையே கொண்டு பல ஏடுகளும் உள்ளன. இதனால் நெடுநாட்களுக்கு முன்பே, இதன் முதற்பத்தும் பத்தாம் பத்தும் மறைந்தன எனக் கொள்ள வேண்டியிருக்கிறது.
Book Details
Book Title பதிற்றுப்பத்து (ஔவை சு.துரைசாமிப் பிள்ளை) (pathitruppaththu)
Author ஔவை சு.துரைசாமிப் பிள்ளை (Owvai Su.Thuraisaamip Pillai)
Publisher கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம் (Gowra Publications)
Year 2009
Edition 1
Format Paper Back
Category Ancient literature | பழங்கால இலக்கியங்கள் , Exegesis | விளக்கவுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha