Menu
Your Cart

ஒளரங்கசீப் (ஆட்ரே ட்ரஷ்கெ)

ஒளரங்கசீப் (ஆட்ரே ட்ரஷ்கெ)
-5 %
ஒளரங்கசீப் (ஆட்ரே ட்ரஷ்கெ)
ஜனனி ரமேஷ் (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆங்கிலத்தில் வெளிவந்த தருணம் முதல் இன்றுவரை மிகுந்த சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் விவாதங்களையும் சந்தித்துவரும் முக்கியமான வரலாற்று நூல். இந்திய வரலாற்றில் அதிகம் வெறுக்கப்படும், அதிகம் தூற்றப்படும், இன்று விவாதிக்க முற்பட்டால்கூட சர்ச்சைக்கு உள்ளாகும் ஒரு மன்னர் உண்டென்றால் அவர் ஔரங்கசீப்தான். கொடுங்கோலர், மதவெறியர், இந்துக்களை வெறுத்தவர், கோயில்களை இடித்தவர் போன்றவைதான் அவர் அடையாளங்களாக இன்று பொதுவெளியில் அறியப்படுகின்றன. வரலாற்றின் நினைவுகளிலிருந்து அவர் பெயரை அழித்துத் துடைத்துவிடவேண்டும் என்று தீவிரமாக ஒரு சாரார் இயங்கிக்கொண்டிருப்பதை இன்றும் காணலாம். கண்டனங்களும் எதிர்ப்புகளும் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் ஔரங்கசீப் ஒரு புதிராகவே இன்னமும் நீடிக்கிறார். அவரைக் குறித்து வரலாற்றுப் பதிவுகளைவிட புனைவுகளே அதிகம் உள்ளன. அவற்றைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள எண்ணற்ற கதைகளையும் கற்பனைகளையும் அகற்றி, ரத்தமும் சதையுமான ஒரு மனிதராக ஔரங்கசீப்பை மீட்டெடுப்பதென்பது சவாலானது மட்டுமல்ல, சிக்கலானதும்கூட. விரிவான வரலாற்றுத் தரவுகளின் உதவியோடு, நடுநிலையான ஆய்வு முறையியலைக் கையாண்டு அந்தச் சவாலையும் சிக்கலையும் வெற்றிகரமாகக் கடந்திருக்கிறார் ஆட்ரே ட்ரஷ்கெ. இந்த ஆய்வு ஔரங்கசீப்பைக் கொண்டாடவும் இல்லை, தூற்றவும் இல்லை. அவரை அவர் வாழ்ந்த காலத்தில் பொருத்தி ஆராயவும் புரிந்துகொள்ளவும் முற்படுகிறது.
Book Details
Book Title ஒளரங்கசீப் (ஆட்ரே ட்ரஷ்கெ) (aurangazeb)
Author ஜனனி ரமேஷ்
ISBN 9789390958252
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 160
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, History | வரலாறு, 2022 Release

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வரலாறு என்பது ஓர் இருள் காடு. நமக்குத் தெரிந்த ஒவ்வொரு உண்மைச் செய்திக்கும் பின்னால் அறிந்துகொள்ளமுடியாத ஓராயிரம் மர்மங்கள் புதையுண்டு கிடக்கின்றன. அந்த மர்மங்களைப் புரிந்துகொள்ள ஒரே வழி, புனைவை நாடுவதுதான். இந்தியா அதிசயங்களின் பூமி என்று சொல்லப்படுவது உண்மையா? கிரேக்கத்தில் இருந்து அலெக்சாண்டர் இந..
₹171 ₹180
திருவள்ளுவர்‌ யார்‌? கடலளவு ஆழமும்‌ விரிவும்‌ கொண்ட கேள்வி இது. இந்து, சைவர்‌, வைணவர்‌, பெளத்தர்‌, சமணர்‌, கிறிஸ்தவர்‌, ஆன்மிகவாதி, வேத விற்பன்னர்‌, வேத மறுப்பாளர்‌, பிராமணர்‌, முற்போக்காளர்‌, பொதுவுடைமைவாதி என்று தொடங்கி பல அடையாளங்கள்‌ அவருக்கு. சில ஏடுகளில்‌ வள்ளுவரின்‌ பிறப்பிடம்‌ தேவலோகமாகவும..
₹356 ₹375
எண்பது நாட்களில் உலகைச் சுற்றி (Around the World in Eighty Days) பிரெஞ்சு மொழியில் வெளிவந்த ஒரு சாகச புதினமாகும். இது பிரெஞ்சு எழுத்தரான ஜுல்ஸ் வேர்ண் என்பவரால் எழுதப்பட்டது. 1873 ஆம் ஆண்டு வெளியான இந்த நாவல் உலகம் முழுவதும் பிரபலமானது...
₹95 ₹100
கோயில்களின் வரலாறு வெளிவந்த அளவுக்கு ஆதீனங்களின் வரலாறோ அவற்றின் தலைமைப் பொறுப்பிலுள்ள ஆதீனகர்த்தர்கள் குறித்த வரலாறோ வெளிவந்ததில்லை. இந்து சமய வரலாற்றில் சைவ ஆதீனம் வகிக்கும் பாத்திரம் என்ன? ஆதீனம் என்றால் என்ன? மொத்தமுள்ள 18 ஆதீனங்களில் இப்போது எவ்வளவு இயங்கி வருகின்றன? அவை எங்கே அமைந்துள்ளன? அவற..
₹105 ₹110