Menu
Your Cart

தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரன்

தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரன்
-5 %
தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரன்
வெ.நீலகண்டன் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழர்களின் இல்லங்களை அவசியம் அலங்கரிக்க வேண்டிய நூல்களில் இது முக்கியமானது. வட இந்திய மன்னர்களில் யாருக்கும் இல்லாத பெரும் சிறப்பு ராஜேந்திர சோழனுக்கு உண்டு! இந்தியத் துணைக் கண்டத்தின் எல்லையைத் தாண்டிச் சென்று போரிட்டவர் என வட இந்தியாவில் யாருமில்லை. இப்போதைய ஆப்கானிஸ்தான் வரை அந்தக் காலத்தில் நீண்டிருந்த பெருநிலப் பரப்புக்குள்தான் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொண்டார்கள். ஆனால் ராஜேந்திரன் மாபெரும் கடற்படையை நிறுவி, இப்போதைய தாய்லாந்து, மலேசியா, இந்தோனேஷியா, கம்போடியா என பல நாடுகளை வெற்றி கொண்டவன். அவனது கடற்படைக்கு இந்தியப் பெருங்கடல் ஒரு குளம் போல இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கிட்டத்தட்ட தெற்காசியாவின் பெரும்பாலான நிலப்பரப்பை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்த தமிழ் மன்னன் அவன். ராஜேந்திரன் சோழ தேசத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதன் ஆயிரமாவது ஆண்டு விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அதையொட்டியே இந்த நூல் வெளிவருகிறது. ஏராளமான கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்படும் சோழர் வரலாற்று நூல்கள் பலவும் ராஜராஜ சோழனைக் கொண்டாடுகிற அளவுக்கு அவனது மகன் ராஜேந்திரனைக் கொண்டாடுவதில்லை. தந்தையைத் தாண்டி பாய்ச்சல் காட்டிய அந்த வீரமகனின் நேர்த்தியான வரலாறு இந்த நூலில் உங்கள் கண்முன் விரியும். பல விஷயங்களை தமிழர்கள் தங்களின் பெருமிதமான அடையாளமாகக் கருதுகிறார்கள். விழாக்களில் பொங்கல் முதல் உடைகளில் வேட்டி வரை அந்த அடையாளங்கள் ஏராளம். ராஜேந்திர சோழனும் அப்படிப்பட்ட ஓர் அடையாளம்தான். தமிழினத்தின் வீரத்துக்கும் ஆளுமைக்கும் நிர்வாகத் திறனுக்கும் அவன் எப்படி உதாரணமாக இருந்தான் என்பதை மிக சுவாரசியமான நடையில் விவரித்திருக்கிறார் வெ.நீலகண்டன்
Book Details
Book Title தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரன் (Tamil Perarasan Rajendran)
Author வெ.நீலகண்டன் (Ve.Neelakantan)
Publisher சூரியன் பதிப்பகம் (Suriyan pathipagam)
Pages 0
Year 2016
Category History | வரலாறு, தமிழர் வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இன்றைய நகரத்து மக்களிடம் இரவு, பகல் போன்ற காலமாற்றங்கள் எந்த வித்தியாசத்தையும் நிகழ்த்துவதில்லை. பொருளாதாரத் தேடலே முதன்மை பெறுவதால், அதைத் தாண்டிய சுக, துக்கங்கள் இம்மாதிரி மக்களின் வாழ்விலிருந்து தூர விலகிப் போகின்றன. அம்மாதிரியான விளிம்பு வாழ் மக்களை முதன்மைப்படுத்திய பதிவுகள் தமிழில் குறைவு. இந்..
₹105 ₹110
மனிதர்கள் படும் பாடெல்லாம் ஒரு சாண் வயிறு எழுப்பும் பசிக்காகத்தான். கிருஷ்ணவேணி, ஏதோ ஒரு முகமறியா மனிதனின் பிணத்தைத் தள்ளுவண்டியில் வைத்து நான்கைந்து கிலோ மீட்டர் தள்ளிக்கொண்டு வருவதும், ஆனந்தி, முகம் தெரியாத யாரோ ஒரு மனிதனின் விந்தணுவை தன் கருப்பையில் சுமப்பதும் பசியை விரட்டுவதற்கான நெடும் போராட்டத..
₹100 ₹105
தன் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளும் உறவாக.. தனக்கு வழிகாட்டும் முன்னோனாக... தன் வாழ்க்கை நிகழ்வுகளுக்கு காரணகர்த்தாவாக... இப்படி சிறுதெய்வங்களை எல்லாமுமாகப் பார்க்கிறான் கிராமப்புற பாமரன். வேல், நடுகல், மரம் இப்படி எளிமையான பொருள்களில் இறையாக உறைந்திருக்கும் சிறுதெய்வங்களே தமிழக கிராமங்களின் காவல் அர..
₹176 ₹185
பசிக்கு உணவு என்பது எப்படி அவசியமோ அப்படி நாவுக்கு ருசி அவசியமாகிறது. சுவையான உணவு வகைகள் எங்கு கிடைக்குமோ தேடிச்சென்று அங்கு ருசி பார்ப்பவர்கள் ஏராளம் உள்ளனர். சில உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு களின் மணமும் ருசியும் நம்மை அங்கேயே அழைத்துச் சென்றுவிடும். இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, உவர்..
₹209 ₹220