Menu
Your Cart

ராமாநுஜர்

ராமாநுஜர்
-5 %
ராமாநுஜர்
₹181
₹190
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மக்களிடம் மிகுந்த மதிப்புப் பெற்றிருக்கும் துறவியான ராமாநுஜர், மாபெரும் சீர்திருத்தவாதியாகவும் புரட்சியாளராகவும் அறியப்படுகிறார். பிராமணர் அல்லாதவர்களையும் தன் குருவாகவும் சீடர்களாகவும் ஏற்றுக்கொண்டவர். திருவரங்கம் கோவிலிலும் திருப்பதி கோவிலிலும் மாற்றங்களைச் செய்து ஒழுங்குபடுத்தியவர். தாழ்த்தப்பட்டவர்களைத் திருக்குலத்தார் என்று குறிப்பிட்டு அவர்களுக்குப் பிறரைப் போலவே சம இடத்தை அளித்தவர். மேல்கோட்டை கோவிலுக்குள் அவர்கள் செல்ல அனுமதி பெற்றுத் தந்தவர். “ராமாநுஜர் அற்புதமான சிந்தனையாளர் மட்டுமன்றி, மாபெரும் செயல்வீரர் என்பதே எனக்கு அவரைப் பற்றி நாடகம் எழுத வேண்டுமென்ற உந்துதல்” என்று கூறும் இ.பா., “இதைப் படிக்கிறவர்களும் மேடை ஏறும்போது பார்ப்பவர்களும் ராமாநுஜரை நமக்குச் சம காலத்தவராக உணர வேண்டுமென்பதுதான் இந்நாடகத்தின் நோக்கம்” என்கிறார். அக்காலத்தியப் புரட்சியாளராக இருந்த ராமாநுஜரை ஸ்தாபனச் சிறையினின்றும் மீட்டுப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் இ.பா. சொல்கிறார். வரலாற்று நாயகர்களில் ஒருவரான ராமாநுஜரைப் புரிந்துகொள்ளத் துணைபுரிவதுடன், ராமாநுஜரைப் பற்றி ஆழமாக அறிவதற்கான தூண்டுதலையும் இந்த நாடகம் ஏற்படுத்தும்.
Book Details
Book Title ராமாநுஜர் (Ramanujar)
Author இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)
ISBN 9789355232663
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Drama Play | நாடகம், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

எப்போதும் இ.பா.வின் நாவல்களில் சமூகம் கண்முன்பு அசைந்தாடும். இவர் தொடுக்கும் கதாபாத்திரங்கள் செயற்கை இழைகளால் நெய்யப்படுவன அல்ல. நம்மிலிருக்கும் யதார்த்தங்களை வைத்தே அழகான ஒரு பூமாலையைத் தொடுப்பார். 1946-ல் தொடங்கும் இக்கதை 1952-ல் முடிகின்றது. சுதந்தரப் போராட்டக் காலகட்டத்தில் நடக்கும் கதையெனினும் ..
₹228 ₹240
சுதந்தர பூமியை வெறும் அரசியல் நாவல் என்று வகைப்படுத்திவிட முடியாது. இந்நாவல் முன்வைக்கும் கவலைகளும், கேள்விகளும் சுதந்தரம் அடைந்த நாளாக நம்முடன் தொடர்ந்து வருபவை. 1973-ல் இந்நாவல் முதல்முதலாக வெளியானபோது மிகுந்த கவனத்தையும், சர்ச்சைகளையும் சம்பாதித்தது. அந்த சர்ச்சைகள் இப்போதுகூட உயிருடந்தான் இருக்க..
₹204 ₹215
ஆணா பெண்ணா என்றால் ஆண். கறுப்பா சிவப்பா என்றால் சிவப்பு. ஒரு பெண்ணாகவும் இருந்து அதுவும் அவள் கறுப்பாகவும் இருந்துவிட்டால்? அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் உணர்ச்சிப்பூர்வமான போராட்டத்தைதான் இ.பா. இந்நாவலில் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு நாவல் மட்டுமே. ஆனால் யாரும் இதனை மேலோட..
₹171 ₹180
இந்திரா பார்த்தசாரதியின் ‘கிருஷ்ணா கிருஷ்ணா’, மிகச் சமீபத்தில் தமிழில் நிகழ்த்தப்பட்டதொரு சாதனை. கிருஷ்ணர் என்கிற கடவுள் அல்லது கதாநாயகன் அல்லது படிமத்தை நாம் நீருடன் ஒப்பிடலாம். எந்தப் பாத்திரத்துடனும் பொருந்திப் போகக் கூடியது. தவிரவும் எக்காலத்துக்குமான பிரதிநிதியாகக் கிருஷ்ணரை வைத்துப் பேசவும் வி..
₹171 ₹180