Menu
Your Cart

இரவுக் காட்சி

இரவுக் காட்சி
-4 %
இரவுக் காட்சி
கே.என்.செந்தில் (ஆசிரியர்)
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வாழ்வு குறித்த சுதந்திரமான பார்வையுடன் இலக்கியப் பரப்பில் கவனம் பெற்றிருக்கும் கே.என். செந்தில் கடந்த காலத்துடனான உறவை முறித்துக்கொள்ளும் எத்தனிப்புகள் கொண்டவர். அவரது படைப்புமொழி வாழ்வுக்குக் கடந்த காலம் வழங்கியுள்ள அர்த்தங்களை நம்ப மறுப்பது. கடந்த காலம் சுமத்தியுள்ள சுய பெருமிதங்களிலிருந்தும் இழிவுகளிலிருந்தும் விடுபட மிக இயல்பாக அவருக்கு முடிந்திருக்கிறது. வாழ்வின் மையங்களிலிருந்து விலகி நின்று அவற்றை விமர்சனங்களுக்குள்ளாக்குவதை, விளிம்பு, மையம் எனக் கட்டமைக்கப்பட்ட எதிர்வுகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் கலையாக்க முற்படும் செந்தில் புத்தாயிரமாண்டின் முதல் தலைமுறையைச் சேர்ந்த இளம் சிறுகதையாளர்களில் முக்கியமானவர் எனத் தயக்கமின்றிச் சொல்லலாம். எழுத்தாளனாக இருப்பது என்றால் என்ன என்பதைக் குறித்து செந்தில் கொண்டிருக்கும் தெளிவு அவரது எழுத்துகளுக்குள்ள கூடுதல் பலம். தன் கதைமாந்தர்கள் கொண்டுள்ள பதற்றத்தை வாசகர்கள் மேல் சுமத்த அவர் ஒருபோதும் முற்படுவதில்லை. அவரது கதைகளில் கலைஅமைதி கூடியிருப்பதற்கு இது முக்கியக் காரணம்.
Book Details
Book Title இரவுக் காட்சி (Iravu Kaatchi)
Author கே.என்.செந்தில் (K.N.Senthil)
ISBN 9788189945930
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 120
Published On Nov 2008
Year 2013
Edition 2
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

எட்டுச் சிறுகதைகள் கொண்ட ‘அரூப நெருப்பு’ கே.என். செந்திலின் இரண்டாவது தொகுப்பு. வாழ்வின் தீவிர நிலைகளுக்கு இணையான நிலைகளையே தன் கதைகளில் உருவாக்க எத்தனிக்கிறார் செந்தில். வாழ்வைப் பற்றிய தனித்த சஞ்சாரத்தின் மூலம் தன் எழுத்தை உருவாக்க விரும்பும் இவரது கதைகளின் மனிதர்கள் பசியாலும் காமத்தாலும் பழி உண..
₹128 ₹135
தன் படைப்புகளைப் பற்றிய சு.ரா.வின் நாற்பதாண்டு காலப் பதிவுகளின் தொகுப்பு. கட்டுரைகள், என்னுரைகள், உரைகள், கேள்வி பதில், நாட்குறிப்பு எனப் பல வகைமைகளில் சு.ரா.வின் தன்மதிப்பீடுகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ‘தாழ்வு மனப்பான்மையை அடக்கத்தின் அடையாளமாகவும் தன் திறன் மதித்தலை அகங்காரத்தின் சின்னமாக..
₹238 ₹250
சமூக இருப்பில் மனிதர்கள் உணரும் அழுத்தங்களிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் அமைப்பாகக் குடும்பங்கள் இருக்கின்றன. அதே சூழலில் அவ்வமைப்பின் பரப்பில் விதிகளை ஒட்டியும் வெட்டியும் நிகழும் மென்னுணர்வுகள், வன்னுணர்வுகளின் ஆட்டத்தையே செந்திலின் கதைகளுக்குள் பார்க்கிறோம். கட்டற்ற காதலின் பரிதவிப்பு, மீறிப் ..
₹190
ஒரு இலக்கியப் பிரதியை வாசிக்கையில், நம்முள் பலவிதமான உணர்வுகள் நிழலாடுகின்றன. அவற்றை வகைபிரித்து ஆராயவும், தொகுத்து உருவம் தரவும் நாம் முற்படும்போது அது அப்பிரதியைப் பற்றிய அறிதலாகவும், அவ் அறிதல் அதன் தர்க்கப்பூர்வமான நீட்சியில் விமர்சனமாகவும் ஆகிறது. அவ்வகையில் கே.என். செந்தில்  தன்னைப் பாதித்த ..
₹124 ₹130