Menu
Your Cart

அத்தியூர் விஜயா

அத்தியூர் விஜயா
-5 %
அத்தியூர் விஜயா
ஜோதி நரசிம்மன் (ஆசிரியர்)
₹124
₹130
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இயல்பாக ஒரு ஆணைப் பற்றி எவ்வளவு அவதூறுகளை சொன்னாலும் இதானே என்று போய்விடுகிற சமூகத்தோடு வாழ்ந்து வருகிறோம் நாம். அதே ஒரு பெண் என்றால் 'அவள் ஒரு மாதிரி கேரக்டர்' அப்படின்னு சொல்லிட்டா போதும் 'முன்புலம்' 'பின்புலம்' எல்லாம் சேர்த்து விவாதித்துப் பார்க்கிற சமூகம்தான் இது. விஜயா போராட்டத்தில் அதுவும் நடந்தேறியது. பெண்களே இப்படிப் பேசினார்கள். 'இருந்தாலும், ஒரு பெண்ணுக்கு இவ்வளவு பிடிவாதம் கூடாது... என்ன நடந்து போச்சு. ஊர்ல உலகத்துல நடக்காதது' என்று பேசுகிற அளவிற்கு இருந்தது விஜயாவின் போராட்டம். பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் வெளியே சொல்ல முன்வரவில்லை அதை வெளியே சொல்ல முன் வந்தவர்களில் விஜயாவும் ஒருவர். 'கற்பு' என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானது. அப்படிப் பார்த்தால் கற்பு இழந்தவள் விஜயா அல்ல,வன்புணர்வு கொண்ட அந்த போலீஸ்காரர்கள்தான். ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு அவளுக்கு ஆதரவாக பெண்கள்தான் முன்வர வேண்டும் என்ற கருத்தியலை உடைத்தெறிந்தது விஜயாவின் போராட்டம். பேராசிரியர் கல்யாணி, வழக்கறிஞர் செரிப், முருகப்பன், பி.வி. ரமேஷ், சிறுவாலை நாகராஜ் என இன்னும் பலர்... இவர்களோடு இணைந்து போராடியவர் 'அத்தியூர் விஜயா'. பெண்களும் போராடலாம் என்கிற மரபை உருவாக்கியவர்களில் அத்தியூர் விஜயா குறிப்பிடத்தக்கவர். பழங்குடி இருளர் பார்வையில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் ஒரு போராளியாக திகழ்ந்தவர் அத்தியூர் விஜயா. மனித உரிமைப் போராட்டத்தில் பலருக்கும் முன்னோடியாக விளங்குபவர் அத்தியூர் விஜயா என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நான் அத்தியூர் விஜயா உடன் பழகியவன், அந்த வகையில் இந்த புத்தகம் வெளியிடும் போது விஜயா இல்லாதது மன வருத்தம் தருகிறது. இருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போராட விஜயா வழிவகுத்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. ஜோதி நரசிம்மன் அவர்களின் என்னுரையிருந்து
Book Details
Book Title அத்தியூர் விஜயா (Athiyur Vijaya)
Author ஜோதி நரசிம்மன் (Jothi Narasiman)
ISBN 9788196340384
Publisher யாப்பு வெளியீடு (Yaappu Veliyeedu)
Pages 120
Year 2024
Edition 1
Format Paper Back
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Social Justice | சமூக நீதி, 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

"போலீஸ்காரர்கள் களத்தில் இறங்கினார்கள். இப்போது வேட்டையாடுவது அவர்களுடைய முறை. வீடு புகுந்து அடித்தார்கள்." காலம் அனைத்தையும் மறக்கச் செய்யும் என்று சொல்வார்கள். அது உண்மையல்ல. வலியும் ரணமும் அப்போதைக்கு மறைந்துபோனாலும் அவை விட்டுச்செல்லும் தடங்கள் என்றென்றும் அழிவதில்லை. "சாம்பார் என்று சொல்லப்பட்ட..
₹162 ₹170
அதிகாலை மூன்று மணியிருக்கும். உறக்கம் சுத்தமாகக் கலைந்து போயிருந்தது. பழனி ஒரு கஸ்டமருடன் வந்தார். எட்டு மணி நேரம் வேலை, எட்டு மணி நேரம் பொழுது போக்கு, எட்டு மணி நேரம் ஓய்வு. ஒரு பாலியல் தொழிலாளிக்கு இந்த நேரக் கணக்குகள் இல்லை அடுத்து போலீஸ்காரர்கள் மேலேதான் வருவார்கள். இப்போது என்ன செய்வது? 'நீ ய..
₹162 ₹170
போலீஸ்காரர்கள் களத்தில் இறங்கினார்கள். இப்போது வேட்டையாடுவது அவர்களுடைய முறை, வீடு புகுந்து அடித்தார்கள். காலம் அனைத்தையும் மறக்கச் செய்யும் என்று சொல்வார்கள். அது உண்மையல்ல. வலியும் ரணமும் அப்போதைக்கு மறைந்து போனாலும் அவை விட்டுச் செல்லும் தடங்கள் என்றென்றும் அழிவதில்லை. 'சாம்பார் என்று சொல்லப்பட..
₹143 ₹150