Menu
Your Cart

உயிர்ச்சொல்

உயிர்ச்சொல்
-5 % Out Of Stock
உயிர்ச்சொல்
₹143
₹150
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உயிர்ச்சொல் நாவல் ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவானது. ஒரு குழந்தைக்காக ஏங்கித் தவித்து, வரமாகப் பெற்றபின் மன அழுத்தத்துக்கு உள்ளாகி அதிலிருந்து மீண்டுவந்த ஒரு தாயின் உண்மைக் கதை இது. பகிர்ந்துகொள்ளப்படாத ஒரு பருவத்தைப் பகுத்தறியும் முயற்சி இது. உண்மைக் கதையின் பின்னணியில் அதே கட்டமைப்போடு ஓர் அரசியல் கற்பனையும் வரையப்பட்டிருக்கிறது. கபிலன்-வைரமுத்து என்ற இளம் தமிழ் எழுத்தாளரின் புதிய பரிணாமம் இப்படைப்பு. இலக்கிய வாசலுக்கு ஒரு வாழ்க்கை வந்து விழும்போது எழுத்தாளனுக்குப் புதிய உத்வேகம் கிடைக்கிறது என்பது கபிலனின் கருத்து. கவிதை, சிறுகதை, நாவல் என்று பல இலக்கிய வடிவங்களைக் கையாண்டவர் என்பதாலும், நவீன சமூகத்தின் பல்வேறு அடையாளங்களைப் பதிவு செய்யும் தாகம் கொண்டவர் என்பதாலும் கபிலன்வைரமுத்துவைப் பன்முக எழுத்தாளர் என்று அழுத்திச் சொல்லலாம். ‘உயிர்ச்சொல்’, கபிலன்வைரமுத்துவின் இரண்டாவது நாவல். நாவலுக்கென்றே பிரத்தியேகமாக எழுதி இசையமைக்கப்பட்ட பாடல், குறுந்தட்டு வடிவில் புத்தகத்துடன். “நாவலுக்குப் பாடல் என்பது புதுமை. நல்ல வரவேற்பைப் பெறும். பாடலில் கலந்திருக்கும் ஒருவிதமான ஏக்கம், உள்மனத்தை என்னவோ செய்கிறது.”-இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்
Book Details
Book Title உயிர்ச்சொல் (Uyirsol)
Author கபிலன் வைரமுத்து (Kabilan Vairamuthu)
ISBN 9788184932072
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 200
Published On Nov 2010
Year 2011
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

2017ஆம் ஆண்டு, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘கவண்’ திரைப்படம் இந்நாவலை அடிப்படையாகக் கொண்டது. நீங்கள் இதுவரை வாசித்துள்ள அனைத்து நாவல்களிலிருந்தும் இது முற்றிலும் வேறுபட்டது. முதல்முறையாகத் தொலைக்காட்சி ஊடகத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள இந்தத் துடிதுடிப்பான நாவல் ஒரு தனியார் தொலைக் காட்சியி..
₹190 ₹200
அம்பறாத்தூணி - சிறுகதைகள் 1750களில் மாமன்னர் பூலித்தேவனின் ராணுவ முகாமில் நிகழ்வது போன்ற ஒரு சிறுகதை. அதில் சங்கரன் கோயில் சன்னதியில் மன்னர் தெய்வத்தை வழிபடும் ஒரு காட்சி. மன்னர் பாடுவதாக ஒரு பாடல் வேண்டும். அதை கற்பனையாக எழுதுவதை விட மாவீரர் பூலித்தேவனே பாடியதாக வரலாற்றில் ஏதேனும் பாடல் உண்டா எ..
₹143 ₹150
பிரசவத்திற்கு பின் பெண்கள் பலருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை (Post Natal Depression) கருவாகக் கொண்டு எழுதப்பட்ட மருத்துவ நாவல். தமிழ்நாட்டில் வேரூன்றும் இளைஞர் இயக்கம் ஒரு ஆயுதப்படையாக எழுச்சியுற்று அதிகாரங்களைக் கைப்பற்றும் ஒரு கற்பனைப் பின்னணியில் இந்த நாவலை அமைத்திருந்தேன். உயிர்ச்சொல் நாவல் ஓர் ..
₹190 ₹200
ஒரு பெருங்கதை என்பது பல கிளை கதைகளையும் துணை கதைகளையும் கொண்டதாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆகோள் என்ற இந்த நாவலின் எந்த அத்தியாயத்தை நீங்கள் திறந்தாலும் அதுவே ஒரு தனிக்கதையாக விரியும். அத்தனை கதைகளும் ஒட்டுமொத்தமாக ஒரு பிரபஞ்சத்தில் இயல்பாக இணைவதுதான் இந்த நாவலின் தன்மை. ஓர் அத்தியாயத்தை நா..
₹209 ₹220