Menu
Your Cart

கடல் கொண்ட நிலம்

கடல் கொண்ட நிலம்
-10 %
கடல் கொண்ட நிலம்
₹216
₹240
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
புதிய களம். நாம் பார்த்தறியாத மனிதர்கள். தனக்கே தனக்கான பிரத்யேகமான கதை சொல்லும் முறை. இவை-தான் யுவன் சந்திரசேகரின் சிறுகதைகளை மற்ற கதைகளில் இருந்து தனித்துவப்படுத்தி, வாசகரை பிரமிப்பில் ஆழ்த்தும் மந்திரஜாலம். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது போல் தெரியும் சம்பவங்களை அடுக்கி ஒரே கதையாக்கும் உத்தி தமிழ் சிறுகதை வரலாற்றில் புதிது. அலுப்புத் தட்டாமல் கதை நகர, சுவாரஸ்யமும் எளிமையும் மிக அவசியம். இவற்றைப் பிரயோகப்படுத்தும்போது படைப்பு, இலக்கிய தரத்தில் இருந்து வெகுஜன ரசனைக்குத் தாழ்ந்துவிடும் அபாயமும் சில சமயங்களில் நிகழ்ந்துவிடும். ஆனால், யுவன் சந்திரசேகரின் எழுத்து எல்லாவற்றையும் தகர்த்துவிடுகிறது. ஒவ்வொரு சிறுகதையையும் படித்து முடித்ததும், இப்படியெல்லாம்கூட எழுதமுடியுமா என்று எழுகிற பிரமிப்பைத் தவிர்க்க முடியவில்லை. இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கதைகள், வாசகனை ஒரு புதிய அனுபவத்தை நோக்கி நகர்த்துபவை. திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டுபவை. வாழ்வில் நாம் கண்டறியாத ஒரு புதிய உள் வெளிச்சத்தை நமக்கு அறிமுகப்படுத்துபவை. இக்கதைகளில் சொல்லப்பட்டிருக்கும், வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்த வெவ்வேறு மனிதர்களின் அனுபவங்கள் ஒரு புதிய பயண அனுபவத்தை நமக்கு ஏற்படுத்துகின்றன. அனுபவித்தறியாத ஒரு நிறைவைத் தருகின்றன. ஏற்கெனவே கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்த ‘யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்’ தொகுப்பில் இடம் பெற்ற, தனித் தொகுப்பாக இதுவரை வெளிவராத கதைகள்.
Book Details
Book Title கடல் கொண்ட நிலம் (Kadal Konda Nilam)
Author யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekar)
ISBN 9788184932522
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 232
Published On Nov 2008
Year 2009

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பெர் பெதர்சன் கதை சொல்லும் பாணி வித்தியாசமானது. உணர்ச்சி மிகாத மொழியில், நடந்தவை அனைத்தையும் மறு பரிசீலனை செய்கிற தொனியில், அன்று நடந்தவற்றின் மீது இன்றுவரை நீங்காதிருக்கும் ஆச்சரியம் மிகுந்த குரலில் சொல்லிக்கொண்டே போகிறார். ஊழின் மாயக் கரங்கள் செயல்படுவதை; தற்செயலின் சாயல் கொண்ட, ஆனால் துல்..
₹293 ₹325
இந்நாவலின் மையம் இசை. இசை, நெருங்கும்போது விலகி விரியும். அகழ்ந்து இறங்கும்போது ஆழ்ந்து செல்லும். இசையில் விரிவையும் ஆழத்தையும் தனது சுயமாக்கிக்கொண்டு வெற்றிபெற்ற கலைஞனின் கதை ‘நினைவுதிர் காலம்’. ஒருவகையில் யுவன் சந்திரசேகர் இசையை மையமாகக்கொண்டு இதற்கு முன்னர் எழுதிய ‘கானல் நதி’ நாவலின் தொடர்ச்..
₹315 ₹350
சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் மிகத் தேர்ந்த கதை சொல்லி யுவன் சந்திரசேகர். அதிதீவிரமான படைப்பும் சுவாரசியமாக எழுதப்பட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு அவரது புனைகதைகள். யுவன் சந்திரசேகரின் ஆறாவது நாவலான ‘பயணக் கதை’ அவருடைய நாவல்களிலேயே உச்சபட்ச வாசிப்பு சுகத்தை உள்ளடக்கியிருக்கிறது. மூன்று நண்பர்க..
₹432 ₹480
தமிழில் இன்று எழுதிவரும் எழுத்தாளர்களில் ஆகப் பெரிய கதை சொல்லி யுவன் சந்திரசேகர்தான். அதி நவீனக் கதைசொல்லி. அவருடைய கதைகளை என்னால் ஒருபோதும் சொற்களாக வாசிக்க முடிந்ததில்லை. ஒலியலகுகளாகவே வாசிக்கிறேன். கண்களால் புரட்டிச் செல்லும்போதும் அந்தப் பிரதி காதுகளால் கிரகிக்கப்பட்டுப் புரிந்துகொள்ளப்படு..
₹261 ₹290