Menu
Your Cart

கடலுக்கு அப்பால்

கடலுக்கு அப்பால்
கடலுக்கு அப்பால்
ப.சிங்காரம் (ஆசிரியர்)
₹100
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கடலுக்கு அப்பால் நாவல், இரண்டாம் உலக யுத்த கால நெருக்கடிகளின் பின்புலத்தில் ஓர் அழகிய காதல் கதையை ஊடு-பாவாகக் கொண்டது. செட்டிதெரு ஆ.சி. வயி. வயிரமுத்துப்பிள்ளை லேவா-தேவிக் கடை அடுத்தாளான செல்லையா, முதலாளியின் சொல்லை மீறி இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தவன். நேதாஜியின் திடீர் மரணத்தை அடுத்து, இந்திய தேசிய ராணுவத்திலிருந்து வெளியேறி, பழைய வானாயீனா பெட்டியடிக்குத் திரும்புகிறான். பெட்டியடிக்குத் திரும்பிவரும் செல்லையாவை வானாயீனாவின் தொழில் மனம் ஏற்க மறுக்கிறது. செல்லையாவின் நடை உடை அவருக்கு ஒப்பவில்லை. 'இந்தத் தொழிலுக்கு அடக்கமில்ல வேணும்' என்றும் அவர் மனம் பலமுறை அடித்துக்கொள்கிறது. கடைசியில் அவனிடமே, ‘இது பொட்டச்சி தொழிலு. ஒனக்கு இது ஒத்து வராது’ என்று கூறிவிடுகிறார். இதனையடுத்து, தனது கடையில் அடுத்தாளாக இருக்கும் வேறொருவனுக்குத் தன் மகள் மரகதத்தை மணமுடிக்க முடிவெடுக்கிறார். இறுதிப்பகுதியில் காதலர்கள் படும் வேதனைகளும் கலக்கமும் கண்ணீரும் பிரிவும் ஆற்றாமையும் யுத்த காலப் பின்னணியிலான ஓர் அழகிய காதல் கதையாக இந்நாவலை உருவாக்கியிருக்கின்றன. - சி. மோகன்
Book Details
Book Title கடலுக்கு அப்பால் (Kadalukku Appaal Natrinai Pathippagam)
Author ப.சிங்காரம் (P. Singaram)
ISBN 9788192366821
Publisher நற்றிணை பதிப்பகம் (Natrinai Publications)
Pages 0
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப. சிங்காரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது. இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார். இரண்டு நாவல்களுமே தமிழ் நாவல் பரப்பின் எல்லைகளை விஸ்தரித்திருப்பவை. ..
₹171 ₹180
புயலிலே ஒரு தோணி' நாவலின் நாயகன் பாண்டியன் பற்றிய ப.சிங்காரத்தின் புனைவு, கெட்டிதட்டிப்போன தமிழர் வாழ்க்கையின்மீது வீசப்பட்ட பெரிய பாறாங்கல். பொதுப்புத்தி, மதிப்பீடுகளைச் சிதைக்கின்ற பாண்டியன் அடிப்படையில் சாகசக்காரன், புரட்சிக்காரன், கலகக்காரன். பூகோளத்தின் மீதான பிரமாண்டமான அனுபவங்கள் குறித்து உற்..
₹285 ₹300
புயலிலே ஒரு தோணி..
₹276 ₹290
ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ நாவல் நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் இரண்டு நிலையில் முன்னோடித்தன்மைகள் கொண்டது. ஓர் இலக்கிய ஆளுமையாக ஒருபோதும் தன்னை காட்டிக்கொண்டிராத ஒருவர் எழுதிய முன் உதாரணம் இல்லாத படைப்பு இந்த நாவல். வெளிவந்து பல ஆண்டுகள் வாசகர் கவனத்திற்கு வராமல் இருந்தும் இன்று தமிழ் ..
₹333 ₹350