Menu
Your Cart

மாற்றுப் பாதையில் ஒரு பயணி

மாற்றுப் பாதையில் ஒரு பயணி
-5 %
மாற்றுப் பாதையில் ஒரு பயணி
யவனிகா ஸ்ரீராம் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அனல் அடங்கா வீட்டின் சூளைச்சுவர்கள் மூக்கை அரிக்க பல முறை கேட்கும் மெல்லிசைப்பாடல்கள் அலுப்பூட்டுகின்றன கருக்கலின் போது வீசும் மெல்லிய குளிர்காற்றிக்கு காத்திருக்கிறேன் முறுக்கும் உடல் வலியுடன் ஆழ்ந்த உறக்கத்தை அது துருவங்களில் இருந்து எப்படியும் தருவிக்கும் கொசுக்கள் அற்று இரண்டு பழங்கள் மீந்திருந்தால் ஒரு நீண்ட பகல் பொழுதை மகிழ்ச்சியுடன் அதற்கு ஒப்புக்கொடுப்பேன் ஒரு லாரி டிரைவரின் வெகுதூரங்களுக்கும் அணைகளில் வளர்ப்பு மீன்களுக்கு வலை வீசுபவரின் துள்ளும் புலர்காலைக்கும் பள்ளிக்குச்செல்லும் சிறார்கள் விடியும் வரை மூங்கில் கூடைகளில் பூப்பறிக்க தலைச் சும்மாட்டில் கட்டிய டார்ச் ஒளி மங்கும் பொழுது இரவு ஷிப்ட் முடிந்து நூற்பாலைப் பேருந்துகள் பெண்களை ஊருக்குள் இறக்கி விடும் தலைகலைந்த வேளையில் பால் வேகன்கள் ஹார்ன் ஒலிக்க பத்திரிக்கைக் கட்டுகளைப்பிரித்தனுப்பும் இடத்தில் இரையும் ஒரு தேனிர் பாய்லர் முன்பு பற்கள் நடுங்கக் கதகதப்புடன் குளிர்காலத்திற்கு முகமன் சொல்கிறேன்
Book Details
Book Title மாற்றுப் பாதையில் ஒரு பயணி (Maatru Padhayil oru payani)
Author யவனிகா ஸ்ரீராம் (Yavanika Sriram)
Publisher Zero degree/எழுத்து பிரசுரம் (Zero degree/Ezhuthu Pirasuram)
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இக்கவிதைகளை திரும்பிப் பார்க்கும் அவசியமின்றி அவை சமகாலத்தின் மீது சுழன்று நிலவி நீட்சியடைந்து வருவதாகவே தோன்றுகிறது !. தனக்கான வரலாற்றை இழந்தவையாகவும் அதைக் கட்டமைப்பதில் சோர்வுற்றதாகவும் இவற்றைப் பார்க்கலாம். இச்சமகாலம் அணையும்போது இக்கவிதைகளும் மங்கிவிடும் என்ற நம்பிக்கை ஆறுதலானது. நீடித்திருக்கு..
₹333 ₹350
அறிவும் உணர்ச்சியும் ஒன்றையொன்று தழுவியபடி வெளிப்பட்டிருக்கும் அ.ரோஸ்லின் கவிதைகள், கன்னித்தீவு மூஸாவின், பெட்டியில் அடைபட்டிருக்கும் லைலா ஒரு கட்டத்தில் வெளியே வந்து உலகை வியந்து பார்க்கும் தன்மையுடன் தனக்குள் பல கேலிகளையும் கொண்டுள்ளது. போக இறைஞ்சும் தன்மையோ, பக்தி மார்க்கங்களோ தென்படாத, கூடவே சமூ..
₹124 ₹130
முதலாளித்துவம் துவங்கிய காலகட்டத்தில் எந்திரங்கள் மனிதனை அவனது உற்பத்தியிலிருந்து அந்நியமாக்கினாலும் ஓரளவு தன்னிறைவுக்கும் வாழ்வாதாரத்துக்குமான வழிகளையாவது விட்டுவைத்திருந்தன. ஆனால் தாராளமயமாக்கலுக்குப் பிறகு மனிதர்கள் ஈடுபடுவதற்கு எந்திரங்கள் கூடப் பறிக்கப்பட்டு விட்டன. பூர்வ நிலங்களிலிருந்தும் பிட..
₹190 ₹200
இந்தக் கவிதைகள் குறிப்பிடத்தக்கவையாக இருப்பதற்கு காரணம் புதுமையான வரிகள். ஒவ்வொரு வரியிலும், வார்த்தையிலும் நம்மை அதிசயங்களைக் காணப் பண்ணும் திறன் கொண்டவையாய் இருக்கின்றன. இந்த வரிகளை விடுத்து வேறுவிதமாய் இவற்றை எழுதியிருந்தால் நிச்சயம் இவை தோற்றுப்போன முயற்சியாகவே இருக்கும். உணர்வுப் பூர்வமான நேர்ம..
₹190 ₹200