Menu
Your Cart

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
-5 %
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
தெய்வீகன் (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மனிதன் பிறக்கும்போது தாயின் ஸ்பரிசம்தான் முதலில் கிடைக்கிறது. அடுத்தது தாய் மண்ணின் ஸ்பரிசம். ஒருவர் எந்த நிலைக்குச் சென்றாலும் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் சொந்த மண்ணின் மீதான பாசம் பட்டுப்போகாது. ஆனால் தங்கள் சொந்த மண்ணை விட்டு இன்னோர் நாட்டில் அகதிகளாக வாழ்வது என்பது பெரும்துயரம். உள்நாட்டுப் போர், இனவாதப் போர் போன்ற பல்வேறு காரணங்களால் சொந்த நாட்டில், தங்கள் உடைமைகளை விட்டுவிட்டு உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பல நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு அடைக்கலம் தரும் நாடு அவர்களை ‘அகதி' என்று அடையாளப்படுத்தி தனி முகாம்களில் அடைத்துவிடுகிறது. அகதி முகாமில் இருப்பது என்பது வேலிக்குள் வாழ்வது போன்றது. வேலி தாண்டி வேறெங்கும் சுதந்திரமாகச் சென்றுவர முடியாது. அப்படிப்பட்ட ஓர் அகதி முகாமில் வாழ்பவர்களைப் பற்றி விகடன் இணைய தளத்தில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. அகதி முகாமில் வாழ்பவர்களின் மன நிலை, அவர்கள் எவ்வாறு அகதிகளானார்கள், தனிமையின் தவிப்புகள், தங்கள் சொந்த நாட்டின் நினைவுகளை ஏந்தி வருந்தும் நிலை.. என அகதிகளின் அத்தனை உணர்வுகளையும் நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார். அகதி முகாமில் பணியில் இருந்ததால் இப்படி அகதிகளின் அத்தனை உணர்வுகளையும் அவரால் பதிவு செய்ய முடிந்திருக்கிறது. அகதிகளின் வாழ்க்கையையும் உணர்வுகளையும் அறிய முகாமுக்குள் செல்லுங்கள்.
Book Details
Book Title நாடற்றவர்களின் கடவுச்சீட்டு (Naadatravarkalin kadavucheettu)
Author தெய்வீகன்
ISBN 978-93-94265-05-9
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Published On Jan 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Eezham | ஈழம், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தநூலில் இடம்பெற்றுள்ள பதிவுகள் வெறுமனே கட்டுரைகளா? சிறுகதைகளுக்கான சிறுவிதைகளா அல்லது நடு இரவில் அடர் கனவின் இடையில் எழுந்து எழுதிவிட்டு தூங்கிய துண்டுப்பகடிகளா - என்று எதுவுமே தெரியவில்லை. புனைவுக்கும் புனைவில்லாத்தன்மைக்கும் இடையில் எழுத்துக்கள் என்னை இழுத்து விளையாடிய இனிய தருணங்கள் என்றுகூட ச..
₹152 ₹160
இது எனது முதலாவது சிறுகதைத்தொகுதி "அமீலா". சிறுகதைகள் என்றால் இப்போதெல்லாம் எழுதவருபவர்களை சிக்னல்போட்டு நிறுத்தி கதைகளை தலைகீழாக புரட்டிப்போட்டு பிதுக்கிப்பார்த்து 'கழிவிரக்கம் காணாது. குடலிறக்கம் போதாது' - என்று விமர்சனத்துண்டுகளை எழுதித்தந்து மருந்துக்கடைகளுக்கு அனுப்பிவிடுகிறார்கள். 'ஆழ்மனதில் அ..
₹124 ₹130
>>ஒரு தேசத்தின் விடுதலைக்காக துப்பாக்கியை தூக்கி போராடி யவன். ஒரு கட்டத்தில் அந்த வாழ்க்கையைத் துறந்து இந்தோனேஷிய நாட்டுக்கு அகதியாகப் போகிறான். அங்கே பல ஆண்டுகள் தொடர்ந்து முயற்சிசெய்த பின்னர், அவனுக்கு அரசாங்கப் பணியொன்று கிடைக் கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல..
₹181 ₹190