Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

மார்டின் லூதர் கிங்: நாயகன் வரிசை

மார்டின் லூதர் கிங்: நாயகன் வரிசை
-5 %
மார்டின் லூதர் கிங்: நாயகன் வரிசை
அஜயன் பாலா (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இந்த விலங்குத்தன்மையிலிருந்து நம்மை வேறுபடுத்தி நம்மை முழுமனிதனாக்குவது எது தெரியுமா? நாம் நமது தேவைகளை கடந்து வாழும் சிலகணங்களில் தான். அதனால்தான் தெருவில் நம் முன் நீளும் கண் தெரியாத சுருக்கம் நிறைந்த கைகளில் சில்லறைகளை போடும் போது நம் மனசு லேசாகிறது.அல்லது சாலையில் அடிபட்டுவிழுந்த ஒரு மனிதனுக்கு ஓடிசென்று உதவி செய்கிற போது கடவுளை தீண்டிய இனபத்தை வீடுவந்து சேரும்போது உணரமுடிகிறது. உண்மையில் வாழ்வின் அர்த்தமுள்ள கணங்கள் இவைதான். இது போன்ற காரியங்களீன் மூலமாகத்தான் நமதுமனம் மேன்மையான உணர்வுகளை நோக்கி இயல்பாக எம்புகிறது. மனித குல விடுதலை வரலாற்றில் யார்யாரெல்லாம் அகிம்சையின் வழி போராடி வெற்றியடைந்தார்களோ அவர்களது இறுதி நிமிடங்களை ஒரு வன்முறை செயல் மூலம்தான் தீர்மானிக்கப்படிருக்கிறது சரித்திரம் நமக்கு கான்பிக்கும் நகை முரண் , மகான் ஏசு, மாகாத்மா காந்தி இவர்களின் வரிசையில் இங்கு நம்மிடம் வந்து சேர்பவர் மார்டின் லூதர்கிங். அகிம்சையை கண்டுபிடித்த அதனை அரசியலில் ஒரு கருவியாக பயன்படுத்தி வெற்றிபெற்ற காந்தியை விடவும் அவரை பின் தொடர்ந்த மார்டின் லூதர்கிங்கின் சாதனை மகத்தானது.. அதற்குகாரணம் காந்திக்கு பின்னால் அவர்முன் கைகட்டி நிற்க ஒரு காங்கிரஸ் பேரியக்கமே இருந்தது. அதனை வழிநடத்தி ஒருங்கிணைத்ததில்தான் அவரது பங்கு. மேலும் அன்று நடந்த இரண்டாம் உலகபோர் அவரது வெற்றிக்கு முழு சாதகமாக இருந்தது. ஆனால் மார்டின் கதையோ வேறு. அவர் தனி மனிதர். அவருக்கு எதிராக நிற்பவர்களோ பெரும் கூட்டம் . ஆனால் தனது மக்களோ போதிய அறீவு கிடைக்கபெறாதவர்கள் அவர்களிடம் கடும் வலியும் உணர்ச்சியும் மட்டுமே இருந்தது. பழிவாங்கும் எண்ணம் நெருப்பாக கொதித்தௌ அதற்கான நியாயங்களும் இருந்தன. அப்படிப்பட்ட கூட்டத்தை அகிம்சையின் பால் திருப்பி தனது மக்களுக்கு மகத்தான விடுதலையை உரிமையை அதிகாரவர்க்கத்திடமிருந்து மீட்டுகொடுத்த அவரது செயல் எத்தனை மகத்தானது எனபதற்கு இந்த அவரது வாழ்க்கை வரலாறு சரியான சாட்சியாக இருக்கும் என நம்புகிறேன்.
Book Details
Book Title மார்டின் லூதர் கிங்: நாயகன் வரிசை (nayagan: Martin Luther King)
Author அஜயன் பாலா (Ajayan Bala)
Publisher நாதன் பதிப்பகம் (Naathan Pathipagam)
Pages 100
Year 2022
Edition 01
Format Paper Back
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha