- Edition: 1
- Year: 2025
- Page: 140
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: களம் புதிது
ஒரு நீதிமன்றத்தில் மூன்று வயது குழந்தையின் சாட்சியம், பெரிய வழக்கைத் தீர்மானிக்கயிருந்தது. பெரிய நீதிபதி கேள்விகேட்டார். குழந்தை பதில் சொன்னது... "மிஸ்டர் ஜட்ஜ், எனக்குப் பசிக்கிறது." இந்த ஒரு வரி பதிலில் நீதிமன்றம் ஸ்தம்பித்தது. கதிர்பாரதியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பு, 'பதினான்காம்சகாயராணி' இதைத்தான் செய்கிறது. திகைப்பு மற்றும் அதிர்ச்சி. ஒவ்வொரு வரியும் அடுத்த வரியைப் படிக்கத் தாமதப்படுத்துகிறது.
உதாரணங்களாக... 'ஒரு கூழாங்கல்லை உருட்டிப் பார்க்கத்தான் மாநதி தரையிறங்கி வந்தது.', 'குழந்தை பதிக்கும் இரண்டாம் அடிக்கும் முதல் அடிக்கும் இடையில்சுழல்வது ஒரு பூமிதான்.', 'எனது அங்கவஸ்திரத்தின் மீது அவர்கள் சீட்டுக்குலுக்கிப் போட்டார்கள்'. திருடன் பற்றிய ஒரு கவிதை இப்படி முடிகிறது... 'என் பக்கம் கொஞ்சம் திரும்பு. நெடுநேரமாக என் கையில் உனக்குச் சொல்லவேண்டிய வணக்கத்தை ஏந்தியபடி நிற்கிறேன்' இந்தக் கவிதைத் தொகுப்பு, பொறுப்பு துறப்பு' என்ற கவிதையோடு நிறைவுபெறுகிறது... 'எல்லாவற்றுக்கும் அவர்களே பொறுப்பு. எதுவும் எனது புகார் எல்லைக்குள் வராது.' கணியன் பூங்குன்றனும் சொன்னது இதையே தான்.
ஒவ்வொரு வரியும் சிந்திக்கவைக்கிறது. வாசிப்பை நிறுத்தும் வார்த்தைகள். பிரபஞ்சத்தைத் தொடாமல் ஒரு கவிதையும் முற்றுப் பெறவில்லை. அதுவே கதிர்பாரதி கவிதைகளின் உச்சமான சிறப்பு.
- எழுத்தாளர் அ.முத்துலிங்கம்
| Book Details | |
| Book Title | பதினான்காம் சகாயராணி (Pathinaankaam Chakaayaraani) |
| Author | கதிர் பாரதி (Kathir Bharathi) |
| Publisher | களம் புதிது (kalam puthithu) |
| Pages | 140 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Poetry | கவிதை, 2025 New Arrivals |