Menu
Your Cart

நவீனத் தமிழ் ஆளுமைகள்

நவீனத் தமிழ் ஆளுமைகள்
-5 %
நவீனத் தமிழ் ஆளுமைகள்
பழ.அதியமான் (ஆசிரியர்)
₹133
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சிட்டி                        தி.ஜ.ர. வல்லிக்கண்ணன் கு. அழகிரிசாமி சரஸ்வதி விஜய பாஸ்கரன் க.நா.சு.               மா.சு. சம்பந்தன்  சக்தி வை. கோவிந்தன் ரா.அ. பத்மநாபன்         ஜார்ஜ் ஜோசப் இரா. இளவரசு மேற்கண்ட நவீனத் தமிழ் ஆளுமைகளின் வாழ்க்கையையும் பணிகளையும் அஞ்சலிகள், அறிமுகங்கள் ஊடாக எடுத்துரைக்கும் கட்டுரை நூல் இது. ‘ஈடு செய்ய முடியாத இழப்பு’, ‘ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்’ என்பன போன்ற சம்பிரதாயமான இரங்கல் வரி ஒன்றுகூட இடம்பெறாத வித்தியாசமான விமர்சனங்கள் அஞ்சலிகள். நவீனத் தமிழ் வாழ்வுக்கு உரமான சென்ற தலைமுறை ஆளுமை சிலரின் செயல்பாடுகளை நிகழ் சூழலின் மதிப்பீடுகளுடன் வரும் தலைமுறைக்குக் கவனப்படுத்துபவை இந்த அறிமுகங்கள். அஞ்சலிகளும் அறிமுகங்களும் கருணையற்ற காலத்தின் பார்வைகள் அடங்கிய தொனியில் தீவிர விமர்சனத்தைப் பூடகமான சொற்களால் உணர்த்துபவை.
Book Details
Book Title நவீனத் தமிழ் ஆளுமைகள் (Naveenath Tamil Aalumaigal)
Author பழ.அதியமான் (Pazha.Adhiyaman)
ISBN 9789352440382
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 152
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சாப்பாட்டில் சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராமணர் ஒரு பக்கமாகவும் சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராமணரல்லாதவர் ஒரு பக்கமுமாகவே இருந்து சாப்பிடவேண்டும். குருகுலத்தில் இவ்வித்தியாசம் கூடாது என்று நான் சொன்னேன். ஆனால் இந்த வேற்றுமையை ஒழிக்க முடியாதென்று (வ.வே.சு.) ஐயர் கூறினார். இதைக் கேட்டதும் நானும் ஸ்..
₹399 ₹420
ராஜா வந்திருக்கிறார்கு. அழகிரிசாமயின் கதைகள் எளிய நடை, சித்தரிப்பின் லாவகம், உள்ளோடும் துயர இழை, அல்லது மிதக்கும் நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம் என அழகுகள் கூடி வந்தவை. தமிழில் சிறுகதைக் காக சாகித்திய அக்காடமி பரிசு பெற்ற முதல் எழுத்தாளர். ‘ராஜா வந்திருக்கிறார்’ என்ற அவரது இந்தத் தேர்ந்தெடுத்த கதை..
₹323 ₹340
தென்னாட்டுத் திலகர் என்று புகழப்பெற்ற சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் (1887-1957) வாழ்க்கை வரலாறு இந்நூல். தன் பேச்சாற்றலால் தமிழகக் காங்கிரசை மக்களிடம் கொண்டுசென்ற இப் பேராளுமையின் சமூக, அரசியல், பத்திரிகைத் துறைப் பங்களிப்பை விவரிக்கும் வரலாறு இது. தமிழக சமூக நீதிப் போராட்டங்களான சேரன்மாதேவி ..
₹499 ₹525
பாரதியின் அனைத்துக் கவிதைகளும் அடங்கிய நவீனப் பதிப்பு. சரளமாகப் பொருள் உணரும்படிக் கடின சந்திகள் பிரித்த எளிய பதிப்பு. சீர் அமைப்பு மாறாதது. நிறுத்தற் குறியீடுகள் கொண்டது. அருஞ்சொற்களுக்குப் பொருள் அமைந்தது. பொருள் அடிப்படையில் வகைப்படுத்திய பதிப்பு. நவீன இளம் வாசகர்களுக்கான எளிய பதிப்பு. முழுக..
₹641 ₹675