Menu
Your Cart

பின்நவீனத்துவவாதியின் மனைவி

பின்நவீனத்துவவாதியின் மனைவி
-5 %
பின்நவீனத்துவவாதியின் மனைவி
₹214
₹225
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சுரேஷ்குமார இந்திரஜித் தற்செயல்களின் ஊடாட்டங்களைக் கதைகள் ஆக்கியவர், புனைவுக்கும் பொய்க்கும் உண்மைக்கும் இடையிலான உறவைக் கதைகளில் கையாண்டவர் எனும் இரு பரவலான சித்திரங்களுக்கு அப்பால் ஆண் - பெண் உறவின் நுட்பங்களை, குறிப்பாக வயோதிகத்தின் உறவுச் சிக்கலைப் பேசியவர். பிரியம் சுரக்கும் உறவுகளுக்குள் கரவாக ஒளிந்திருக்கும் வன்மத்தை எழுதியவர், குற்றங்களின் உளவியலை எழுதியவர், உன்னதங்களை - தொன்மங்களைத் தலைகீழாக்கியவர், கனவுகளையும் அவை கலைந்து நிதர்சனத்தை எதிர்கொள்வதையும் எழுதியவர், வாழ்க்கை சரிதைத்தன்மையுடைய கதைகளை எழுதியவர், இணை வரலாறு கதைகளை எழுதியவர், பகடிக் கதைகளை எழுதியவர், சாதி குறித்து ஈழம் குறித்து அக்கறைகொண்ட கதைகளை எழுதியவர் எனப் பல்வேறு முகங்கள் கொண்டவர் இவர். பொதுவாக மனிதர்களின் உன்னதங்களின் மீது அவநம்பிக்கை கொண்ட கதைசொல்லி என்றாலும் மானுட நேயத்தையும் அன்பின் வெம்மையையும் சுமந்துசெல்லும் கதைகளையும் அவர் எழுதியிருக்கிறார். (முன்னுரையிலிருந்து)
Book Details
Book Title பின்நவீனத்துவவாதியின் மனைவி (Pin Naveenaththuvavaathiyin Manaivi)
Author சுரேஷ் குமார் இந்திரஜித் (Suresh Kumaar Indhirajidh)
ISBN 9789386820921
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 0
Year 2019

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சுரேஷ்குமார இந்திரஜித்தின் இச்சிறுகதைகள் யதார்த்தமும், அதிபுனைவும் கலந்தவை. மனித வாழ்வின் வினோதங்கலைக் கதைக்களனாகக் கொண்டவை. அகத்தின், வாழ்வின் மர்மப் பிரதேசங்களை இரவது கதைகள் தொடுகின்றன. மர்மம் என்பது ஸ்தூலத்தில் மறைந்திருக்கும் சூட்சுமம். அகத்தைப் பற்றிய, வாழ்வைப் பற்றிய புதிய பகுதிகளை இந்த மர்மத்..
₹81 ₹85
நாற்பதாண்டு காலமாகச் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் முதல் நாவல் 'கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்'. இந்த நாவலில் ஆதித்ய சிதம்பரம் என்ற எழுத்தாளரின் மனம், சிந்தனை, பால்யகால வாழ்க்கை, மண வாழ்க்கை ஆகியன சித்திரிக்கப்பட்டுள்ளன. அந்த எழுத்தாளரின் ஐந்து குறுநாவல்களின் பகுதிகள் இந்..
₹119 ₹125
இந்த நாவலின் களம் தற்செயல் நிகழ்வுகளின் சூதாட்டம். சூதாட்டத்தில் சாதகமும் பாதகமும் நடக்கலாம். பெரும்பாலான நிகழ்வுகள் தற்செயலாக நடக்கின்றன. முடிச்சுகள் சுலபமாக அவிழ்கின்றன. கதாபாத்திரங்கள் பழமைவாதம் அற்றவர்களாக இருக்கிறார்கள். இன்னொரு புறத்தில் ஒரு மாயக் கதாபாத்திரம் தனக்கேயுரிய ஒரு கதை அமைத்துச் செல..
₹143 ₹150