Menu
Your Cart

ஒற்றை மார்பு

ஒற்றை மார்பு
-5 %
ஒற்றை மார்பு
எஸ்.கே.முருகன் (ஆசிரியர்)
₹166
₹175
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அய்யாவின் மகன் ‘டேய் கந்தா…’ என்று கூப்பிடும் எட்டு வயது முதலாளியின் மகனுக்கு முன்னே புன்னகை மாறாமல், ‘சொல்லுங்க சின்ன முதலாளி’ என்று அடிமை பூதமாக சேவகம் புரியும் அய்யா, வீட்டுக்கு வந்துவிட்டால் சர்வாதிகார சவுக்கு எடுத்துவிடுவார். ‘ஒரு சின்னப்பய என்னை டேய்ன்னு கூப்பிடுறான், அவங்கப்பனும் சிரிச்சுக்கிட்டே நிக்கிறான்…’ என்று கடைத்தெருவில் கிடைத்த அவமானங்களுக்காக அம்மாவை அடிப்பார். நல்லவேளையாக, அய்யாவிடம் வாங்கியதை அம்மா என்னிடம் கொட்டியதில்லை. அதனால்தான் அத்தக்கூலியாக வாழ்வதற்கே எத்தனை வேடம் போடவேண்டியிருக்கிறது என்று அய்யாவை படிக்கத் தொடங்கினேன். அன்று தொடங்கிய மனித பாடம் இன்றுவரை தொடர்கிறது. ஒவ்வொரு மனிதரிடமும் ஆயிரக்கணக்கான கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. அம்மாவின் கண்ணீரை நிறையவே பார்த்துவிட்டதால், என்னுடைய கதை படிப்பவர்களை கண்ணீர் சிந்தவிடுவதில்லை. வெயிலும் வெயில் சார்ந்த பிரதேசமான விருதுநகரில் நான் படித்த மனிதர்கள்தான் இந்தப் புத்தகத்தில் நிரம்பி வழிகிறார்கள். வெக்கை பூமி என்பதால் உழைப்பிலும் உணவிலும் காட்டும் ரசனையை எங்கள் மக்கள் கலைகளின் மீது காட்டுவதில்லை. ஆனால் காதல் மட்டும் பாறைகளையும் துளைத்து முளைத்தே விடுகிறது. அதனால்தான் என்னுடைய கதைகளில் காதல் காற்று அதிகமாகவே வீசுகிறது. ஆனந்த விகடன் பத்திரிகையில், ‘மந்திரச் சொல்’ மூலம் தொடங்கிய எழுத்தாளர் பயணத்தின் 12-வது முக்கியமான பதிவு இது. - எஸ்.கே.முருகன்
Book Details
Book Title ஒற்றை மார்பு (Otrai Maarbu)
Author எஸ்.கே.முருகன் (S.K.Murugan)
ISBN 9789383067268
Publisher சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications)
Pages 216
Year 2015

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஸ்பெக்ட்ரம் ஊழல் கலர் கலராக ஆடும் இன்றைய காலகட்டத்தில், ‘காமராஜரைப் போல ஒரு அரசியல்வாதி மீண்டும் பிறந்து நாட்டைச் சீர்திருத்த மாட்டாரா’ என ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் மக்கள். காரணம், மக்கள்நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த நேர்மையான அரசியல் துறவி அவர். காமராஜர், த..
₹200 ₹210
தினசரி வாழ்க்கையில் பலவித ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்கும் நமக்கு, தன்னம்பிக்கை வார்த்தைகள்தான் பல்வேறு நிலைகளில் பெரிதும் ஆறுதலாக இருக்கும். சாதாரண மனிதர்களுக்கு வரும் துன்பங்கள், தடைகள், சிக்கல்கள் போன்றவை சாதனை மனிதர்களையும் விட்டுவைப்பதில்லை. ‘துன்பங்களும் துயரங்களும் தவிர வாழ்க்கையில் வேறு என்ன மி..
₹128 ₹135
எளிய தமிழில் சித்தர் மருத்துவம்சித்தர்களின் பாடல் வரிகளுக்கான பொருளை எளிய கதைகள் மூலம் விளக்குவதுடன் சித்தர்கள் பற்றிய வரலாற்றையும் இணைத்துத் தருகிறது இந்தப் புத்தகம்.நாம் மனதில் என்ன நினைக்கிறோமோ, அந்த வாசனையை மனோரஞ்சிதப் பூவில் நுகர முடியும் என்பார்கள். அதுபோலவே, சித்தர் பாடல்கள் ஒவ்வொரு மனிதருக்க..
₹185 ₹195
கடவுளின் நிறம் வெண்மைவிருதுநகரைச் சேர்ந்தவர். பத்திரிகையாளராக, எழுத்தாளராக மற்றும் மனநல ஆலோசகராக வலம் வருபவர். மனைவி ஜோதி, மகன் நிர்மல், மகள் நிலா ஆகியோருடன் சென்னையில் வசிக்கிறார். ‘மந்திரச் சொல்’, ‘ஞானகுரு’ போன்ற தொடர்களை விகடன் இதழ்களில் எழுதி இருக்கிறார். இவை தவிர, ‘தலையணை மந்திரம்’, ‘வெற்றி தரு..
₹284 ₹299