Menu
Your Cart

மிளகாய் ஹோம நாயகி ப்ரத்யங்கிரா தேவி

மிளகாய் ஹோம நாயகி ப்ரத்யங்கிரா தேவி
-10 %
மிளகாய் ஹோம நாயகி ப்ரத்யங்கிரா தேவி
உமா சம்பத் (ஆசிரியர்)
₹108
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அன்னை ப்ரத்யங்கிராதேவியைப்பற்றி இப்போது பிரபலமாகப் பேசுகிறார்கள். அவளது கோயிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் படையெடுக்கிறார்கள். ஆனால், அவள் திடீரெனத் தோன்றியவள் அல்ல. அந்தக் காலத்தில் மகான்களும், தாந்திரிகம் கற்றவர்களும் ப்ரத்யங்கிராதேவியைப் பூஜித்து வந்திருக்கிறார்கள். எதிரிகளை வெல்வதற்கு பத்ரகாளியான ப்ரத்யங்கிராதேவியின் அருள் அவசியம் என்று வேத சூட்சுமம் கூறுகிறது. மன்னர்களும்கூட வழிவழியாக இவளை ஆராதித்து வணங்கினார்கள். சோழர்கள் காலத்தில் ப்ரத்யங்கிராவுக்கு நிறைய கோயில்கள் இருந்திருக்கின்றன. 'சம்பவாமி யுகே யுகே' என்ற தத்துவப்படி, குரோதமும் வன்முறையும் துரோகமும் நிறைந்த இந்தக் கலியுகத்தில், நல்லவர்களின் பக்கத்தில் துணையிருக்கவேண்டிய அத்தியாவசியத்தின் காரணமாக, நமது நன்மைக்காக, உலக க்ஷேமத்துக்காக ப்ரத்யங்கிராதேவி கருணையுடன் அவளாகவே இப்போது ஈர்க்கிறாள். நம்மை ஏந்தி அள்ளிக்கொள்ளத் தயாராகக் காத்திருக்கிறாள். ஓர் அடி அவளை நோக்கித் தவழ்ந்தால் போதும். ஓடோ டிவந்து எடுத்துக்கொள்ளும் தாய், தயாபரி அவள். இந்நூலில் ப்ரத்யங்கிராதேவியின் வரலாறு, அவதார நோக்கம், அசுரர்கள் வதம் மற்றும் வழிபாட்டு முறைகள், அவள் குடிகொண்டிருக்கும் திருக்கோயில்கள், துதிக்கப்படும் நாமாவளிகள், தேவியைப்பற்றிய பரவசமூட்டும் தகவல்கள் என சகலமும் அடங்கியிருக்கின்றன.
Book Details
Book Title மிளகாய் ஹோம நாயகி ப்ரத்யங்கிரா தேவி (Milagaai Homanayagi Prathyangira Devi)
Author உமா சம்பத் (Uma Sampath)
ISBN 9788183682756
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 112
Year 2007

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பகவான் விஷ்ணுவின் பெருமைக் காவியம்!..
₹333 ₹370
மனிதனாகத்தான் பிறந்தார்கள். மனம் போனபடி பித்தனாகத் திரிந்தார்கள். பின்னர் அந்த மனத்தையே ஆட்கொண்டு சித்தர்கள் ஆனார்கள். அழியாத உடம்பைப் பெற்றார்கள். சாகாத நிலையை அடைந்தார்கள். கூடுவிட்டு கூடு பாய்ந்தார்கள். எதையும் தங்கமாக்கும் சக்தி பெற்றார்கள். முக்காலத்தையும் உணர்ந்தார்கள். வானத்திலும், நீரிலும், ..
₹189 ₹210