Menu
Your Cart

ஒரு மகாத்மா ஒரு கொள்கை ஒரு கொலை

ஒரு மகாத்மா ஒரு கொள்கை ஒரு கொலை
-5 %
ஒரு மகாத்மா ஒரு கொள்கை ஒரு கொலை
கன்யூட்ராஜ் (ஆசிரியர்)
₹437
₹460
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வரலாற்றுப் பிழைகள் ஏதும் இல்லாத வகையில் மிகக் கவனமாக எழுதப்பட்டுள்ள வரலாற்றுப் புனைவு இது. மகாத்மா காந்தியின் இறுதிச் சில மாத வாழ்வைச் சொல்லும் இந்நூல் இரு முக்கியமான நிகழ்வுகளைப் பேசுகிறது. ஒன்று அவர் விரும்பாத இந்திய பாக் பிரிவினையை ஒட்டி இங்கு நடந்த கொடும் கொலை வெறியாட்டம். நூல் விரிக்கும் இரண்டாம் நிகழ்வு இந்த வன்முறைகளுக்கு இடையே கோட்சே கும்பல் காந்தியைக் கொல்ல மேற்கொண்ட சதிகள். முதல் முறை அவர்கள் தோல்வியுற்று, இரண்டாம் மூறை அதை வெற்றிகரமாக நிறைவேற்றியதுடன் நாவல் முடிகிறது. அ.மார்க்ஸ் இந்த நாவலை எழுதியுள்ள நண்பர் கன்யூட்ராஜ், காந்தியின் கடைசி நாட்களை மூன்று தமிழ் இளைஞர்கள் நேரடியாக அருகிலிருந்து பார்த்ததைப் போன்று ஒரு சித்திரத்தை வரைந்து காட்டியுள்ளார். இன்று. புதிய நூற்றாண்டின் முகப்பில் இந்துத்துவப் பேரரசு எழுச்சி பெற்றிருப்பதாகச் சொல்லப்படும் சூழல்களில், காந்தியையும் அவரது கொள்கைகளையும் அவர் கொலை செய்யப்பட்ட வரலாற்றுக் கொடூரத்தையும் ஆழமான கோட்பாட்டுச் சந்திப்புகளில் நிறுத்தி ஆசிரியர் விவாதிக்க வைத்திருக்கிறார். ந.முத்துமோகன்
Book Details
Book Title ஒரு மகாத்மா ஒரு கொள்கை ஒரு கொலை (Oru magathma oru kolgai kaolai)
Author கன்யூட்ராஜ் (Kanyootraaj)
ISBN 9788123441993
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 527
Published On Mar 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Gandhism | காந்தியம் , New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பொருநை நதிக் கரையினிலேதமிழகத்தின் பெரும்பான்மை நதிகளில் ஆற்றுநீரும் ஆற்றுமணலும் பெருமளவில் கொள்ளையடிக்கப்படுவதை மையமாக வைத்தெழுதப்பட்ட இப்புதினம் எதிர்காலத் தலைமுறையினருக்கு இயற்கை வளங்களைக் கொண்டு சேர்க்கவேண்டுமென்ற அக்கறையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது...
₹219 ₹230
திருமலைக்கு வாழ்க்கை என்பது மானுடர்க்கு கடவுள் வழங்கிய அற்புதமான வரம். அதை ஒளியாகவும், மிகுந்த நம்பிக்கையுடனும் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று அவர் கண்டார். மகிழ்வான வாழ்வின் அடையாளமாக காந்திஜி திருமலைக்கு இருந்தார். காந்தியக் கொள்கைகளுக்குப் புதிய¬ விடியலைத் தந்தவர் திருமலை. உண்மையாலும், அன்பாலு..
₹219 ₹230