Menu
Your Cart

வள்ளலாரும் நாவலரும்: அருட்பா X மருட்பா போராட்ட வரலாறு

வள்ளலாரும் நாவலரும்: அருட்பா X மருட்பா போராட்ட வரலாறு
-5 %
வள்ளலாரும் நாவலரும்: அருட்பா X மருட்பா போராட்ட வரலாறு
ப.சரவணன் (பதிப்பாசிரியர்)
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வள்ளலாரது பாடல்கள் தொகுக்கப் பெற்று, “திருவருட்பா” என்ற பெயரில் 1867இல் வெளியாயின. பழமைப்பிடிப்புள்ள சைவர்களோ தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய பஞ்சபுராணங்களே அருட்பாக்கள் என்றும் - பன்னிரு திருமுறைகளே அருட்பாக்கள் என்றும் கூறி வள்ளலாரது பாடல்களைக் ‘குற்றமுடைய மருட்பாக்கள்’ என்று கண்டித்தனர். வள்ளலாரது பாடல்களை அருட்பா என்று நிரூபிக்கும் பொருட்டு வள்ளலாரது குழுவினரும்; மருட்பா என்று நிரூபிக்கும் பொருட்டு நாவலரும் அவரது குழுவினரும் கண்டனப் போர்க் கொடிகளைத் தூக்கினர். பிரச்சினை, நீதிமன்றம்வரைகூடச் சென்றது. இன்று, தமிழ் இலக்கிய, சமய வரலாற்றில் வள்ளலாரின் இடமும் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. நாவலருக்கும் உரிய இடம் அமைந்துவிட்டது. ஆயினும் இவ்விருவர் பற்றிப் பேசப்படும் பொழுதெல்லாம் ஏதோ ஒருவகையில் அருட்பா மருட்பா விவகாரம் இடைப்பிறவரலாகவேனும் குறிப்பிடப்படுவதைக் காணலாம். ‘பெருமக்கள் இருவருக்கும் சிறப்புச் செய்யாத வீண்வாதம்’ என்று அறிஞர் சிலர் இதனைப் புறந்தள்ளுவதும் உண்டு. ஆனால் விரிவான ஆய்வை நிகழ்த்தப்படவில்லை. இந்நிகழ்வு நடந்து ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டதால் புனைவுகள் சிலவும் ஊடுருவிவிட்டன. இப்பின்னணியில் அருட்பா X மருட்பா போரைப் பற்றி விரிவான தனி ஆய்வாக இந்த நூல் அமைகிறது. இலக்கியச் சான்றுகளையும் வரலாற்று ஆவணங்களையும் சட்டத்தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுத்தப்பட்ட மிக முக்கியமான ஆய்வு நூல் இது.
Book Details
Book Title வள்ளலாரும் நாவலரும்: அருட்பா X மருட்பா போராட்ட வரலாறு (Vallalaarum Naavalarum)
Editor ப.சரவணன் (Pa.Saravanan)
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Published On Feb 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category ஆய்வு அறிக்கை | Study Report, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சோறுபோட்டு ‘அகவல்’ பாடுவதையே வள்ளலாருக்குச் செய்யும் கைமாறாகக் கருதும் இந்த நாளிலும், ஆன்மநேய ஒருமைப்பாட்டுக்குத் தடையாக உள்ள எதையும் தயவு தாட்சண்யமின்றித் தூக்கியெறிந்து இந்தச் சமூகத்தைச் சீர்திருத்திய விஞ்ஞானி வள்ளலார் என்பதைப் புலப்படுத்த எழுதப்பட்டவையே இந்நூலிலுள்ள கட்டுரைகள். வள்ளலார் குறித்..
₹285 ₹300
இனக்குழுக்களாகத் தோற்றம் பெற்ற தமிழினம் பண்பாடு, சமயம், பழக்கவழக்கங்கள், கலை, இலக்கியம், பொருளாதாரம், நிர்வாகம் என்று பல தளங்களில் தம்மைச் செழுமைப்படுத்திக் கொண்ட காலகட்டம் சங்க காலம். வரலாற்றின் மிக அடிப்படையான, மிக முக்கியமான காலகட்டமாக இருந்தபோதிலும் சங்க காலம் பற்றிய பதிவுகள் மிகக் குறைவாகவே நம்..
₹314 ₹330
எதைக் கேட்டால் எல்லா உலகங்களுக்கும் எலலாப் பாவங்களுக்கும் ஒழிந்து போகுமா அத்தகைய சிவபெருமானின் மிகச் சிறந்த ததுதுவத்தையும், தனித்துவ மகிமையையும், திருவுருச் சிறப்பையும் பற்றி இந்நூலின் ஆசிரியர் எழுதியுள்ளார். மேலும் 49 உட்பொதிவுகளுடன் விளக்கிக் கூறி உள்ளார்...
₹166 ₹175