Menu
Your Cart

நீலரதி

நீலரதி
-5 % Out Of Stock
நீலரதி
சாண்டில்யன் (ஆசிரியர்)
₹200
₹210
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வாணகிரியின் சரிவின் பாதியில் இரு கால்களையும் சற்றே விரித்துத் திடமுடன் நின்றுகொண்ட இளமாரன், மனிதர்களை விழுங்கச் சித்தமாக நிற்கும் ராட்சஸனைப் போல் திடகாத்திரமான உயர்ந்த சரீரத்துடனும் கொடுமை தட்டிய கழுகுக் கண்களுடனும் காட்சி யளித்தாலும், அத்தனை கடுமைக்கும் பின்னால் ஏதோ ஒரு நகைச்சுவையும் அவன் மனத்தில் ஊசலாடுவதை அவன் இதழ்களில் மிக லேசாக அரும்பிய இளநகை நிரூபிக்கவே செய்தது. அன்று அவன் அவசரமாகப் பல் துலக்காமலும் காலைக்கடன்களை முடிக்காமலும் எழுந்து வந்து விட்டிருந்தாலும் முகத்தில் எந்தவித விகாரமோ, உறக்க உணர்ச்சியோ இல்லை. மேலே அங்கி ஏதும் அணியாமல் கிழே சல்லடத்தை மட்டும் அணிந்து இடுப்பிலிருந்து முழங்கால் வரை மறைத்த அந்த ஓர் உடையைத் தவிர வேறு ஆடையேதும் அவன் சரீரத்தை மறைக்காததால் காலைக் கதிரவன் ஒளிவீச்சில் மிகவும் சிவந்து அக்னி தேவதையே உருவெடுத்து வந்துவிட்டது போல் காட்சியளித்தான் இளமாரன். வீட்டைவிட்டு அவசரமாக உதயகுமாரனைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்ததால் ஆயுதமேதும் அவன் எடுத்து வரவில்லையென்றாலும் கைகள் எஃகு போல் காட்சியளித்த காரணத்தால் அவனுக்குத் தனியாக ஆயுதமேதும் தேவையில்லை என்பது பார்ப்பவர்களுக்கு நன்றாகப் புலனாகும். இந்தத் தோரணையில் வாணகிரிக் குன்றின் நடுமத்தியிலிருந்த சிறு வீட்டின் முன்பாக நின்றிருந்த இளமாரன் கீழே தரைமட்டத்திலிருந்து மலை ஏறித் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஆபத்தைச் சில விநாடிகளே நோக்கினான்.
Book Details
Book Title நீலரதி (neelarathi)
Author சாண்டில்யன் (Saantilyan)
Publisher வானதி பதிப்பகம் (Vanathi pathipagam)
Year 2016
Edition 6
Format Paper Back
Category சரித்திர நாவல்கள் | Historical Novels, Classics | கிளாசிக்ஸ்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மன்னன் மகள்..
₹485 ₹510
கன்னிமாடம்(சரித்திர நாவல்) - சாண்டில்யன் :ஈழ நாடும், சோழ நாடும் பாண்டிய நாட்டில் தலையிட்டு நின்ற காலத்தில் அமைக்கப்பெற்றிருக்கிறது கன்னி மாடத்தின் கதை...
₹437 ₹460
ராஜதிலகம் என்பது தமிழக எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம்.1960களில் குமுதம் வார இதழில் இத்தொடர் வெளிவந்தது. வானதி பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்த கதையில் பல்லவர் வரலாற்றை ஒட்டி கற்பனைகளையும் சேர்த்து கதை எழுதப்பட்டுள்ளது. காஞ்சி கைலாசநாதர் கோவில், மாமல்லபுரம் அரங்..
₹646 ₹680