Menu
Your Cart

மச்ச புராணம்

மச்ச புராணம்
-5 %
மச்ச புராணம்
வேணு சீனிவாசன் (ஆசிரியர்)
₹333
₹350
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வியாச முனிவரால் எழுதப்பட்ட பதினெட்டு புராணங்களுள் ஒன்றான மச்ச புராணம் பகவான் ஸ்ரீமன் நாராயணன் மீன் அவதாரமாக வடிவெடுத்து நீர்ப்பிரளயத்திலிருந்து இவ்வுலகைக் காத்த வரலாற்றைக் கூறுகிறது. திருமாலின் பத்து அவதாரங்களில் மச்ச அவதாரமே அவரது முதல் அவதாரம் என்பதால் பதினெண் புராணங்களில் மேலும் சிறப்புப் பெறுகிறது மச்ச புராணம். இப்புராணத்தில் சிவபெருமானின் பெருமைகளை மகாவிஷ்ணுவே தனது பக்தனிடம் சிறப்பித்துக் கூறுகிறார். சிவபெருமானை சினம் கொள்ள வைத்த தட்சயாகம், பராசக்தி செய்த தவம், பிரம்ம சிருஷ்டி, பிரம்மனின் தலையை சிவபெருமான் கொய்தது, கையில் பிரம்ம கபாலம் ஒட்டிக்கொண்டது, தாருகாவனத்தில் பிட்சாடனராகத் திரிந்த சிவபெருமான் செய்த லீலைகள், இருபத்தி ஐந்து சிவ ரூபங்கள், தாரகாசுரனுடன் போர், திரிபுர வதம், பார்வதி கல்யாணம், முருகப் பெருமானின் பிறப்பு என்று சிவபெருமானின் பராக்கிரமங்கள் மிக விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. மேலும் இந்த மச்சபுராணத்தில் புராணக் கதைகள், நீதிநெறிகள், போதனைகள் தவிர, யுகங்களின் கணக்கு, ரிஷிகளின் பரம்பரை என்று காலவியல், தொடர்பான கணக்கியல் தகவல்களும் இருக்கின்றன. இன்னும் பிதிர்களுக்குச் செய்ய வேண்டிய சிராத்தம், அதனால் ஏற்படும் நன்மைகள், பலவகைப்பட்ட விரதம் இருப்பதன் நன்மைகள், அதனால் அடையும் பலன்கள், விரதங்களை சரியாகச் செய்யாவிட்டால் ஏற்படும் தீமைகள் என்று நமது சரீரத்துக்கும் ஆன்மாவுக்கும் நன்மை தரும் ஏராளமான அறிவியல் தகவல்கள் புராண கவசத்திற்குள் ஒளிந்து கொண்டிருப்பதை அறிய முடிகிறது. இப்புராணத்தைப் படிப்பவர்கள், கேட்பவர்கள் யாராகிலும் அவர்கள் அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு லோகத்தை அடைவர் என்று பெரியோர் சிறப்பித்துச் சொல்லியிருக்கிறார்கள். நாமும் மச்ச புராணம் படித்து விஷ்ணுவின் திருப்பாதகமலங்களைச் சரணடைவோம் வாருங்கள்.
Book Details
Book Title மச்ச புராணம் (Machcha Puraanam)
Author வேணு சீனிவாசன் (Venu Seenivasan)
ISBN 9789386737199
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 0
Year 2017

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க வந்தவர்கள் மட்டும் அல்ல, அவர்கள் மானுடத்தைப் போற்ற வந்தவர்கள். ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையிலும் சனாதன தர்மம் சில சங்கடங்களை எதிர்கொள்ள நேர்ந்தபோது, புதிய எழுச்சியுடன் பக்தி இயக்கம் தோற்றுவித்து தெள்ளு தமிழால் வேதத்தைப் புதுமை செய்தவர்கள் ஆழ்..
₹143 ₹150
நமது பாரத தேசத்தில் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் அர்ச்சாவதாரமாக எழுந்தருளி தரிசனம் தரும் கோயில்கள் ஏராளமாக இருக்கின்றன. அவைகளுள் பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் ‘திவ்ய தேசங்கள்’ எனவும், திவ்ய தேசங்களைப்பற்றிய பாடல்கள் ‘மங்களாசாசனம்’ ..
₹380 ₹400
சீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்நீங்கள் அதைப் படியுங்கள். பயனடையுங்கள்.அரிய அவருடைய சிந்தனைகளைப் பற்றிப் புரிந்து கொள்வது என்பது இன்றைய மக்களுக்கு எளிதான காரியமாயிராது. அதனால் அதை எளிமையாக்கித் தருவதன் பொருட்டுத்தான் இந்த நூலை உருவாக்கி உங்கள் கரங்களில் தவழ விட்டிருக்கிறோம்.ஆனால்...கன்பூசி..
₹474 ₹499
உலகத்தில் கோடிக்கணக்கான மக்கள் பிறக்கின்றனர் இறக்கின்றனர். ஆனால் அதில் ஒரு சிலரே சாதனைகள் அப்படிப்பட்டவர்களுள் ஒருவர்தான் சே செய்து சரித்திரத்தின் பொன் ஏடுகளில் தங்கள் பெயரையும், பெருமைகளையும் எழுதி வைத்துச் செல்கின்றனர். குவேரா சரித்திரத்தின் பக்கங்களில் மட்டும் இல்லாமல், மக்களின் மனங்களிலும் கல..
₹190 ₹200