ஒரு பெண் எப்போது முழுமையடைகிறாள் எனும் கேள்விக்கான விடை, அவள் தாய்மையடையும்போதுதான் என்பதே சரியானதாக இருக்கும். அந்த அளவுக்கு தாய்மைத்தன்மை புனிதமானது. ஓர் உயிரை உருவாக்கித் தரும் ஒப்பற்ற கடமையைச் செய்வதும் தாய்மைதான். ஒரு தேசத்தின் ஆரோக்கியம் என்பது தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தைக்கொண்டே கணக்கிடப..
உரைநடை என்கிற வடிவத்தைக் கையில் எடுத்த நாவலாசிரியர்கள், உண்மைச் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு, நாம் தினமும் சந்திப்பவர்களைக் கதாபாத்திரங்களாக்கி நாவல் வரிகளில் உலாவ விட்டார்கள். ஏன், நாமும்கூட முகம் தெரியாத யாரோ ஓர் எழுத்தாளனின் படைப்புகளில், ஏதோ ஒரு கதாபாத்திரமாக வாழ்ந்துகொண்டு இருக்கலாம்; வாழ ந..
வாழ்க்கையை இனிதே வாழ வேண்டும்; ஒவ்வொரு நாளையும் கொண்டாட வேண்டும்; வாழ்வில் வரும் சிக்கல்களை நீக்க வேண்டும்; சிறுமைகளைச் சீராக்கிட வேண்டும்... இதற்கு என்ன செய்ய வேண்டும்? இறையருள் பெற வேண்டும். எல்லோருக்கும் இறையருள் கிடைக்குமா? நிச்சயம் கிடைக்கும். கடவுளின் அருள் என்பது தினமும் கடவுளுக்கு பூஜை புனஸ்..
பயணம் என்பது பயனுள்ளதாக இருக்க வேண்டும். அது சுற்றுலாப் பயணமாக இருந்தாலும் சரி; ஆன்மிகப் பயணமாக இருந்தாலும் சரி. அந்த வகையில் இந்த நூல் இரண்டு வகைப் பயணங்களிலும் அடங்கும். இமயமலைத் தொடரில் உள்ள ஒரு மலை முடிதான் கயிலாயம். திபெத் நாட்டில் உள்ள இந்த மலையை இந்துக்கள் மட்டுமல்லாது பிற சமயத்தினரும் புனிதம..
தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சிக்கு எத்தனையோ பெருமைகள் உண்டு. அகண்ட காவிரியாக சலசலத்து வந்து, கரிகால் பெருவளத்தான் கட்டிய கல்லணையைத் தழுவி, விளைநிலங்களை பசுமையாக்கிப் பாய்ந்தோடும் காவிரி ஆறு கரை பாவி நடக்கும் மாநகர் திருச்சி. துப்பாக்கித் தொழிற்சாலை, பாரத மிகுமின் நிறுவனம் என தொழிற்சாலைகளும் ந..
கோயில்கள் நம் மனக் குழப்பங்களைப் பறந்தோடச் செய்யும் திருத்தலங்கள். பொதுவாக வாழ்க்கைச் சிக்கலில் மக்கள் உழன்று தவிக்கும்போதும் துன்புறும்போதும் அவற்றிலிருந்து விடுபடுவது எப்படி என்பது தெரியாமல் வருந்துவார்கள். விதியை நினைத்து நொந்துபோவார்கள். திருப்பங்கள் ஏற்படாதா? தலை எழுத்தை இறைவன் திருத்தி எழுத மா..
வரலாறு, மகத்துவம், தாத்பரியம் பற்றி எழுத முயற்சிப்பவர்கள், அதன் பொருள் உணர்ந்து எழுத முற்பட்டால், அந்தப் படைப்பு கலைப்பெட்டகமாகப் பல நூற்றாண்டுகளுக்கு ஒளி வீசித் திகழும். பக்தி மாரக்கத்துக்கும் அது நூற்றுக்கு நூறு பொருந்தும். அவள் விகடனில் ஸ்ரீ வெங்கடாஜலபதியின் கதையும் அப்படி ஒரு பொக்கிஷமாகத்தான் இட..
நாடகத்துக்கு முன்னோடி கூத்து என்றால், திரைப்படத்துக்கு முன்னோடி நாடகம். அந்த நாடகம் வழி வந்தவர்களே பிற்காலத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னோடிகளாகினர். நாடகம் வழி வந்ததால் ஆரம்பக் காலங்களில் தமிழ்த் திரைப்படங்களில் பாடல்கள் நிறைந்திருந்தன. அந்தப் பாடல்களையும் கதாபாத்திரங்களே பாடி, நடிக்கவேண்டி இருந்த..
திரைத்தொண்டர்தமிழ் திரையுலகில், கதை கேட்பது முதல் க்ளைமாக்ஸ் காட்சியை முடிப்பது வரை எல்லாமே சகுனம் பார்த்து செய்வார்கள். அதற்குக் காரணங்கள் பல இருந்தாலும், கோடிகளை முதலீடு செய்யும் துறை என்பதே முக்கிய காரணம். `சகுனம் பார்ப்பது, எனக்கு இயல்பாகவே பிடிக்காது. அப்படி சகுனம் பார்த்து எடுக்கப்பட்ட எத்தனைய..
இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் திரைப்படங்கள் மக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவை. அதிலும் பெண்களுக்கு ஆறுதலும் ஆசுவாசமும் தருவது திரைப்படங்கள். 1980-90களில் வெளியான திரைப்படங்களில் தோன்றிய கதாபாத்திரங்களாகவே தங்களைக் கருதிக்கொண்டிருந்தனர் வெகுமக்கள். அந்த அளவுக்கு மக்களின் அன்றா..
பொதுவாக திறமையான கலைஞர்கள் தன்மானமும் சுயமரியாதையும் கொண்டவர்களாக இருப்பார்கள். பணம், புகழைவிட தான் கற்றறிந்த கலைக்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அப்படிப்பட்ட ஒரு நாகஸ்வரக் கலைஞன்தான் இந்தப் புதினத்தின் நாயகன். நாகஸ்வரத்துக்கும் நாட்டியத்துக்கும் முதலில் போட்டி ஏற்பட்டு பின்னர் இரண்டும் ..
சங்கீத மும்மூர்த்திகளில் இளையவரான முத்துசுவாமி தீட்சிதர், போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத கால கட்டத்தில் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பயணம் செய்தவர். ஒரு க்ஷேத்திரம் விடாமல் விஜயம் செய்து தரிசித்து, தான் தரிசித்த மூர்த்திகள் மீதெல்லாம் ராக பாவத்துடன் பாடல்கள் புனைந்து சரித்திரம் படைத்த சங்கீத ச..