காதல் மணம் புரிந்தவர்கள்கூட தங்கள் பிள்ளைகளின் காதலுக்குத் தயக்கம் காட்டுவார்கள். சாதியும் மதமும் குறுக்கே நிற்பது மட்டும் இவர்கள் தயக்கத்துக்குக் காரணமல்ல. தாங்கள் இந்த சமூகத்தில் அனுபவித்த கஷ்டங்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்பதாலும்தான். ‘காதல் வயப்பட்டால் மாணவ-மாணவிகள் தங்கள..
தமிழ் இலக்கிய உலகில், பொருள் பொதிந்த சொல்லாலும், வசீகர எழுத்து நடையாலும் அழுத்தமான தடம் பதித்தவர் நாஞ்சில் நாடன். எந்த ஒரு பிரச்னையையும் சமூக அக்கறையோடு அலசி, அதனை விவாதப் பொருளாக்கிவிடும் ஆற்றல் இவரது எழுத்துக்கு உண்டு. எழுதுவது கதையாயினும், கட்டுரையாக இருப்பினும், கவிதையாகப் பூத்தாலும் அதில் தனி ம..
மனித வாழ்வு பெரும் ரகசியங்களை உள்ளடக்கியது. மனிதத்தன்மை என்று பொதுவெளியில் நாம் சொல்லும் வார்த்தைக்குள் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. மனம் சார்ந்த நிலையில் மனிதனின் தன்மைகள் மாறுபடுகின்றன. மனிதனின் இயல்புகளிலும் இந்த மாற்றங்கள் எதிரொலிக்கின்றன. சமீப காலமாக ஆட்டிசம் குறித்துப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறத..
நன்றாகத் தூங்கினால் டாக்டரிடம் போகவே வேண்டாம். ஓவராகத் தூங்கும்போதோ தூங்காமலேயே இருக்கும்போதோ உடல் நலம் பாதிக்கப்படும், தூக்கத்தால் உடல் எவ்வாறு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை விளக்கும் மருத்துவ நூல் இது. மனிதனுக்கு சராசரியாக 8 மணி நேரத் தூக்கமும் குழந்தைகளுக்கு 10 மணி நேரத் தூக்கமும் தேவை. இதைக் குறை..
முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மூதூர், கலை, பண்பாடு, கலாசாரத்தை நல்வகை பேணும் நான்மாடக் கூடல் நகர், தூங்கா நகரம் என இத்தனை சிறப்புப் பெற்ற நகரம் மதுரை. பழைமையான கோயில்களிலும் கட்டடங்களிலும் கோட்டைகளிலும் தன் பழம்பெருமைகளைக் கட்டிக்காத்து வரும் பெருமைமிக்..
வாழ்க்கையின் அனுபவக்காரர்கள் கிராமத்தில் பிறந்தவர்கள். ஒவ்வொரு கிராமமும் ஆரோக்கியம் நிரம்பி வழியும் பசுஞ்சோலைதான். மாசற்ற காற்று, பருவம் தப்பாமல் பெய்யும் மழை, இளம் வெயில், சுத்தமான தண்ணீர், கொடை அள்ளித்தரும் காடு, மலை என்று ஊர்ப் புறத்தின் சுற்றுமுற்றும் இயற்கை வளங்கொண்டு இருக்கும். அங்கு வாழும் மன..
கருவிலேயே கலைஞனாக உருவெடுப்பவர்களின் புகழ், காலத்தால் மறையாது. அவர்கள் மெய் உருக உழைத்த உழைப்பின் பலன்களை எப்பேர்ப்பட்ட சக்தியாலும் கரைத்துவிட முடியாது. தெய்வீகச் சிற்பங்கள் தரும் ஆத்ம அமைதியை நாடிச் செல்லும் எண்ணத்தின் வெளிப்பாடு, மாபெரும் நோன்பாகவே அமைந்துவிடும். அப்படி, சிலை வடிவச் சிற்பங்களைச் ச..
விவேகத்தை இழந்ததால் கிடைக்கும் வேகத்தை மட்டுமே வாடிக்கையாக கொண்டது இன்றைய வாழ்க்கை முறை. இயந்திரத்தனமான இந்த வாழ்க்கை முறையில் ஆத்மார்த்தமான அமைதியைத் தேடி அலைபவர் அநேகர்.மனிதன் எனும் உருவிலேயே அமைதி எனும் அருவம் அடங்கி இருப்பதை உணராது, புண்ணியத்தைத் தேடி எங்கெங்கோ அலைகிறது இன்றைய நவநாகரிக உலகம். உண..
சாதாரண காய்ச்சல் முதல் நஞ்சு முறிக்கும் சிகிச்சை வரை, பாட்டிகளிடமும் உள்ளூர் வைத்தியரிடமும் சென்றனர் நம் முன்னோர். ஆனால், இப்போது நிலைமை அப்படியில்லை. லேசான தலைவலிக்கு மருத்துவமனை வாசலில் தவமிருக்கும் நிலைதான் இப்போதுள்ளது. நமக்கென இருந்த, இருக்கும் மூலிகைச்செடிகளின் அருமையை அறியாததால் அவற்றை உதாசின..
அக்னி நட்சத்திர காய்ச்சலுக்கு இணையாக அனல் வீசிக் கொண்டிருக்கிறது 2009 தேர்தல் களத்தில்! இமயம் முதல் குமரி வரையில், கையில் மைக் பிடித்து, தொண்டை வலிக்கக் குரல் எழுப்பி, வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டும், எதிர்க்கட்சிகள் மீது புழுதிவாரி இறைத்துக் கொண்டும் இருக்கிறார்கள் அரசியல்வாதிகள்! நாடு தழுவிய வ..
ஒருவரது மன ஓட்டம் மற்றொருவர் மனதில் தடங்களை உருவாக்குகிறது. தேர்வு வாழ்க்கைக்கும் வாழ்க்கைத் தேர்வுக்குமான ஆசிரியரது மன ஓட்டம் இங்கே கட்டுரைகளாகத் தடம் பதித்திருக்கிறது. உலக நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடியான ரோம, கிரேக்க சாம்ராஜ்ஜியங்களின் வழியாகப் படர்ந்த ஆசிரியரின் பார்வை, வரலாற்றுச் சுவடுகளின் தன..
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். மனித சமுதாயம் நித்தம் நித்தம் விதவிதமான நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், லட்ச லட்சமாகப் பணம் இருந்தாலும் நாம் செல்வமற்றவர்கள்தான். நோய்த் தாக்குதல் என்பது இன்று பரவலாகக் காணப்படுகிறது. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களாலும்..