Menu
Your Cart

தாகூர்: கல்விச் சிந்தனைகள்

தாகூர்: கல்விச் சிந்தனைகள்
-5 %
தாகூர்: கல்விச் சிந்தனைகள்
₹119
₹125
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மகாத்மா காந்தியடிகளாலேயே ‘குருதேவர்’ என்றழைக்கப்பட்டவர் மகாகவி இரவீந்திரநாத தாகூர். தமது 31 வது வயதில் 1892 ல் ‘கல்வியில் பொருத்தமற்ற நிலை’ என்ற வெளியீட்டின் மூலம் பிரிட்டிஷ் இந்தியாவின் கல்விமுறையைக் கூர்மையான விமர்சனங்களுக்கு உட்படுத்தினார். இது வெளியான 10 ஆண்டுகளில் அவர் சாந்தி நிகேதனில் பிரமச்சரிய ஆசிரமத்தை அமைத்தார். ‘புதிய அறிவுப்பரவலும் ஏற்பும் தாய்மொழிக் கல்வியால் மேம்படும்; ஆங்கில பாணியைத் திறனற்ற முறையில் தழுவ முயன்றால் வெகு சிலருக்கு அது அரைகுறைக் கல்வியைத் தரும்’ என்பதே தாகூரின் அப்போதைய கருத்து.‘கல்லூரிக்கல்வியையும், தேசத்தின் வாழ்க்கையையும் இணைப்பது; வெறும் அந்நியப் புத்தகங்களைப் படிப்பதோடு நின்று விடாமல் தமது நாட்டையும், தமது மக்களையும் படித்தறிய வேண்டுமென்று’ தாகூர் தம் உரைகளிலும், கட்டுரைகளிலும் வலியுறுத்தினார்’’ கல்வி மூலமாக அன்னிய மேலாதிக்கம் நிலைநாட்டப்படுவதை ஏற்கமுடியாது; நமது கட்டுப்பாட்டில் கல்வியைக் கொண்டு வர வேண்டும்; அன்னியக் கல்வியை அச்சுப்பிசகாது நாம் அப்படியே பின்பற்றினால் நமக்கு மனவளமோ, பலன்களோ இரண்டுமே கிடைக்காது’’ என்றார்.
Book Details
Book Title தாகூர்: கல்விச் சிந்தனைகள் (Tagore Kalvi Sinthanaigal)
Author ரவீந்திரநாத் தாகூர் (Raveendhiranaath Thaakoor)
ISBN 9788189909253
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 128
Year 2015

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஆசியாவின் மகாகவிகளில் ஒருவரான ரவீந்தரநாத் தாகூருக்கு நோபல் பரிசை வென்று தந்த படைப்பு கீதாஞ்சலி. முதலில் வங்க மொழியில் எழுதப்பட்டு பின்பு அவராலேயே 1912இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்தக் கவிதை நூல் இறைவனோடு இணையத் துடிக்கும் பக்தனின் வேட்கையின் வடிவமாகும். கடவுளின் மீதான மனிதக் காதலை மிக எளிமை..
₹124 ₹130