Menu
Your Cart

ராப்பிச்சை – கவியரங்கக் கவிதைகள்(தொகுதி 2)

ராப்பிச்சை – கவியரங்கக் கவிதைகள்(தொகுதி 2)
-5 %
ராப்பிச்சை – கவியரங்கக் கவிதைகள்(தொகுதி 2)
₹266
₹280
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சென்னையில் என் தலைமையில் ஒரு கவியரங்கம் நடந்தது. அதில் பாலுமகேந்திரா¸ கே.எஸ். ரவிக்குமார்¸ பார்த்திபன் போன்ற பிரபலமான இயக்குநர்கள் கலந்து கொண்டு கவிதை பாடினர். அப்போது இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் அவர்கள்¸ “திரைப் படங்களுக்குப் பாடல் எழுதாமலே திரைப்படப் பாடலாசிரியர்களுக்கு இணையாகப் புகழ்பெற்றவர் கவிக்கோ அப்துல் ரகுமான்” என்று புகழ்ந்துரைத்தார். அவர் அத்தகைய சான்றிதழ் தர எனக்கு உதவியவை கவியரங்கங்களே. கவியரங்கங்களே என்னை மக்களிடம் அழைத்துச் சென்றன. தழிழ்நாட்டிலுள்ள ஏறத்தாழ எல்லா அமைப்புகள் நடத்திய கவியரங்கங்களிலும் நான் கலந்து கொண்டிருக்கிறேன். இதற்காகப் பட்டி தொட்டியெல்லாம் பயணம் செய்திருக்கிறேன். வானொலி¸ தொலைகாட்சி என்று எல்லா ஊடகங்களையும் நான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். இது என் கவியரங்கக் கவிதைகளின் இரண்டாம் தொகுதி. என் கவியரங்கக் கவிதைகளை ஒன்றாகத் தொகுத்துப் பார்த்தபோது ஒரு விஷயம் புலப்பட்டது. மேனாட்டில் புதிய கவிதை இயக்கங்கள் வந்த பிறகு சிலருக்குப் பழைய செவ்வியல் (Classicism) மீது ஆர்வம் ஏற்பட்டுப் புதுச் செவ்வியல் (Neoclassicism) இயக்கம் ஒன்று தோன்றியது. அது உயர்ந்த பழைய செவ்வியல் மரபுகளை மீண்டும் கவிதையில் கொண்டு வந்தது. என் கவியரங்கக் கவிதைகளில் நான் இதையே செய்திருக்கிறேன். இது எனக்கு ஒரு வகையில் மகிழ்ச்சியைத் தருகிறது. சிற்றிலக்கிய மரபுகளைக் குறிப்பாகத் தூது¸ உலா இலக்கியங்களின் சாயரை நீங்கள் இந்தக் கவிதைகளில் காணலாம். கவிதைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று தானே உதிக்கும் கவிதை¸ மற்றொன்று மக்களுக்கு ஏதேனும் செய்தி கூறச் செய்யப்படும் கவிதை. கவியரங்கக் கவிதைகள் இரண்டாம் வகையைச் சார்ந்தவை. ஆனால் இந்தக் கவிதைகளிலும் தானே உதிக்கும் கவிதை மின்னல்களையும் நீங்கள் காணலாம். – கவிக்கோ அப்துல் ரகுமான்
Book Details
Book Title ராப்பிச்சை – கவியரங்கக் கவிதைகள்(தொகுதி 2) (Rapichakaran)
Author கவிக்கோ அப்துல் ரகுமான் (Kavikko Apdhul Rakumaan)
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் (Universal Publishing)
Year 2014
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய ஆலாபனை¸ பித்தன்¸ பால்வீதி¸ சுட்டுவிரல்¸ நேயர் விருப்பம்¸ சொந்தச் சிறைகள்¸ மின்மினிகளால் ஒரு கடிதம்¸ ரகசியப்பூ¸ பறவையின் பாதை¸ தேவகானம்¸ கண்ணீர்துளிகளுக்கு முகவரி இல்லை ஆகிய 11 கவிதை நூல்களின் தொகுப்பே கவிக்கோ கவிதைகள் பாகம் – 1 எனும் இந்நூல்...
₹713 ₹750
ஆலாபனை - கவிக்கோ:'கவிக்கோ' அப்துல் ரஹ்மானின்சாகித்ய அகாடெமி விருது பெற்ற ஆலாபனை தொகுப்பிலிருந்து:கண்ணீரின் ரகசியம்....'இறைவா எனக்குப்புன்னகைகளைக் கொடு’ என்றுபிரார்த்தித்தேன்அவன் கண்ணீரைத் தந்தான்‘வரம் கேட்டேன்சாபம் கொடுத்து விட்டாயே’என்றேன்புத்தகத்திலிருந்து சில ..
₹95 ₹100
இந்நூலிற்கு கவிஞர் மீரா எழுதிய அணிந்துரையில் “ஆழக் கடலில் மூழ்கவும் அண்ட வெளியில் பறக்கவும ஒரு சிலர்க்கே முடியும். அந்த ஒரு சிலருள் ஒருவர் அப்துல் ரகுமான். அவர் மரபுக் கவிதையையும் புதுக்கவிதையையும் ஒரு சேரத் தம் ஆளுகைக்கு உட்படுத்தியவர். முதன் முதலில் மரபில் புதுக்கவிதையின் போக்கையும் நோக்கையும் பு..
₹48 ₹50
1995 களில் “ஜூனியர் போஸ்டில்” வெளிவந்த 102 கட்டுரைகளில் தேர்ந்தெடுத்த 32 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இயல்பாக வளர்ந்த திறமை ஒன்று ஈடுசொல்ல முடியாத இலக்கியப் புலமை இரண்டு பறந்து தரை வெளியில் பாயும் ஆற்றுச் சிந்தனையை பனிமலையிலிருந்து வழிந்து விழும் அருவிச் சிந்தனையாக மாற்றிக் கொண்ட..
₹114 ₹120