Menu
Your Cart

இறந்ததால் பிறந்தவன் – கவியரங்கக் கவிதைகள்(தொகுதி 1)

இறந்ததால் பிறந்தவன் – கவியரங்கக் கவிதைகள்(தொகுதி 1)
-5 %
இறந்ததால் பிறந்தவன் – கவியரங்கக் கவிதைகள்(தொகுதி 1)
₹219
₹230
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் பங்குபெற்ற கவியரங்கங்களில் பாடப்பெற்ற கவிதைகளின் முதல் தொகுதியே ‘இறந்ததால் பிறந்தவன’; என்று தொகுத்து தரப்பட்டுள்ளது. சில எடுத்துக்காட்டுகள்: வேலூரில் கவிஞர் கண்ணதாசன் தலைமையில் கவியரங்கம். தலைப்பு: குடும்ப நலம். நடந்த இடம் ஒரு கல்யாண மண்டபம். என் கவிதையை இப்படித் தொடங்கினேன்: கல்யாண மண்டபத்தில் கருத்தடைப் பிரசாரம் அவ்வளவுதான் தூங்கிக் கொண்டிருந்த அவை எழுந்து ஆரவாரம் செய்தது. தஞ்சாவூரில் கலைஞர் தலைமையில் கவியரங்கம் கலைஞர் அரங்கத்திற்கு வந்தபோது கவிஞர்கள் யாரும் வந்திருக்கவில்லை. அவர்கள் சற்றுத் தாமதமாக வந்தனர். கலைஞர் தம் கவிதையில் ‘என்னைக் காக்க வைத்த கவிஞர்களே!’ என்று குட்டுவைத்தார். என்முறை வந்தபோது நான் கூறினேன்: காக்கவைத்த கவிஞர் எனத் தாக்கிய தலைவரே! வாக்களித்தோம்; பதவியிலே வைத்துள்ளோம்; நம்மையெல்லாம் காக்கத்தா னேவைத்தோம் காத்திருக்க மாட்டீரோ? அரங்கம் ஆரவாரத்தால் அதிர்ந்தது. கலைஞரைத் திரும்பிப் பார்த்தேன். அவர் சிரித்துக் கொண்டிருந்தார். அவர் கோபம் போன இடம் தெரியவில்லை.
Book Details
Book Title இறந்ததால் பிறந்தவன் – கவியரங்கக் கவிதைகள்(தொகுதி 1) (Irandhathal Pirandhavan)
Author கவிக்கோ அப்துல் ரகுமான் (Kavikko Apdhul Rakumaan)
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் (Universal Publishing)
Year 2014
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய ஆலாபனை¸ பித்தன்¸ பால்வீதி¸ சுட்டுவிரல்¸ நேயர் விருப்பம்¸ சொந்தச் சிறைகள்¸ மின்மினிகளால் ஒரு கடிதம்¸ ரகசியப்பூ¸ பறவையின் பாதை¸ தேவகானம்¸ கண்ணீர்துளிகளுக்கு முகவரி இல்லை ஆகிய 11 கவிதை நூல்களின் தொகுப்பே கவிக்கோ கவிதைகள் பாகம் – 1 எனும் இந்நூல்...
₹713 ₹750
ஆலாபனை - கவிக்கோ:'கவிக்கோ' அப்துல் ரஹ்மானின்சாகித்ய அகாடெமி விருது பெற்ற ஆலாபனை தொகுப்பிலிருந்து:கண்ணீரின் ரகசியம்....'இறைவா எனக்குப்புன்னகைகளைக் கொடு’ என்றுபிரார்த்தித்தேன்அவன் கண்ணீரைத் தந்தான்‘வரம் கேட்டேன்சாபம் கொடுத்து விட்டாயே’என்றேன்புத்தகத்திலிருந்து சில ..
₹95 ₹100
இந்நூலிற்கு கவிஞர் மீரா எழுதிய அணிந்துரையில் “ஆழக் கடலில் மூழ்கவும் அண்ட வெளியில் பறக்கவும ஒரு சிலர்க்கே முடியும். அந்த ஒரு சிலருள் ஒருவர் அப்துல் ரகுமான். அவர் மரபுக் கவிதையையும் புதுக்கவிதையையும் ஒரு சேரத் தம் ஆளுகைக்கு உட்படுத்தியவர். முதன் முதலில் மரபில் புதுக்கவிதையின் போக்கையும் நோக்கையும் பு..
₹48 ₹50
1995 களில் “ஜூனியர் போஸ்டில்” வெளிவந்த 102 கட்டுரைகளில் தேர்ந்தெடுத்த 32 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இயல்பாக வளர்ந்த திறமை ஒன்று ஈடுசொல்ல முடியாத இலக்கியப் புலமை இரண்டு பறந்து தரை வெளியில் பாயும் ஆற்றுச் சிந்தனையை பனிமலையிலிருந்து வழிந்து விழும் அருவிச் சிந்தனையாக மாற்றிக் கொண்ட..
₹114 ₹120