Menu
Your Cart

உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன்

உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன்
-5 %
உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன்
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
1995 களில் “ஜூனியர் விகடனில்” வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கவிஞர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசினாலும் அவர்களுடைய இதயம் ஒரே மொழியில் பேசுகிறது. அது கண்ணீராலும், புன்னகையாலும் ஆன மொழி; எல்லோருக்கும் பொது மொழி; திணிக்கப்படும் மொழி அல்ல; சுவாசத்தைப் போல காதலைப் போல சுயமாகச் சுரக்கும் மொழி. இந்தக் கண்ணீர் நம் பொதுக் காயங்களின் இரத்தம். இந்தப் புன்னகை நம் பொது வெற்றிகளின் திருவிழாத் தீபம். ஒருமை இதயங்களின் இயல்பான குணம். வேற்றுமை நம்முடைய வேஷங்கள். இந்த வேஷ ஒப்பனைகளை நீக்கி இதயங்களின் ஒருமையை உணர்த்தும் சக்தி கவிஞனுக்குத்தான் உண்டு. நம்முடைய உண்மையான தேசிய நீரோட்டத்தை இலக்கியங்களில்தான் காண முடியும். இந்த நீரோட்டத்தின் நதிமூலம் ஒன்றல்ல, பல; அது பாய்ந்தோடிய வரலாற்றுப் பாதையில் வந்து கலந்த உப நதிகளும் பல. இந்தப் “பலவேணி சங்கம”த்தின் விளைவாக இந்த நீரோட்டத்திற்கு நுண்மையானதொரு பொது சுவையும், பொது நிறமும் ஏற்பட்டிருக்கிறது. இந்த நீரோட்டத்தின் சாரத்தை அருந்தியே இந்திய இலக்கியங்கள் பயிராகின்றன. நம் நாட்டுப் பிறமொழி இலக்கியங்களை அறிமுகம் செய்து கொள்வதன் மூலம் அவற்றோடு ஒப்பிட்டு நம்மை மதிப்பிட்டுக் கொள்ளவும், வேண்டினால், திருத்திக் கொள்ளவும், புதிய வளங்களைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். இந்த நோக்கமே இந்த கட்டுரைகளின் பிறப்புக்கு மூலகாரணம். இவ்வாறு கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தனது அணிந்துரையில் கூறியிருக்கிறார்.
Book Details
Book Title உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன் (un kannal thoongi kolkiren)
Author கவிக்கோ அப்துல் ரகுமான் (Kavikko Apdhul Rakumaan)
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் (Universal Publishing)
Year 2012
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய ஆலாபனை¸ பித்தன்¸ பால்வீதி¸ சுட்டுவிரல்¸ நேயர் விருப்பம்¸ சொந்தச் சிறைகள்¸ மின்மினிகளால் ஒரு கடிதம்¸ ரகசியப்பூ¸ பறவையின் பாதை¸ தேவகானம்¸ கண்ணீர்துளிகளுக்கு முகவரி இல்லை ஆகிய 11 கவிதை நூல்களின் தொகுப்பே கவிக்கோ கவிதைகள் பாகம் – 1 எனும் இந்நூல்...
₹713 ₹750
ஆலாபனை - கவிக்கோ:'கவிக்கோ' அப்துல் ரஹ்மானின்சாகித்ய அகாடெமி விருது பெற்ற ஆலாபனை தொகுப்பிலிருந்து:கண்ணீரின் ரகசியம்....'இறைவா எனக்குப்புன்னகைகளைக் கொடு’ என்றுபிரார்த்தித்தேன்அவன் கண்ணீரைத் தந்தான்‘வரம் கேட்டேன்சாபம் கொடுத்து விட்டாயே’என்றேன்புத்தகத்திலிருந்து சில ..
₹95 ₹100
இந்நூலிற்கு கவிஞர் மீரா எழுதிய அணிந்துரையில் “ஆழக் கடலில் மூழ்கவும் அண்ட வெளியில் பறக்கவும ஒரு சிலர்க்கே முடியும். அந்த ஒரு சிலருள் ஒருவர் அப்துல் ரகுமான். அவர் மரபுக் கவிதையையும் புதுக்கவிதையையும் ஒரு சேரத் தம் ஆளுகைக்கு உட்படுத்தியவர். முதன் முதலில் மரபில் புதுக்கவிதையின் போக்கையும் நோக்கையும் பு..
₹48 ₹50
1995 களில் “ஜூனியர் போஸ்டில்” வெளிவந்த 102 கட்டுரைகளில் தேர்ந்தெடுத்த 32 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இயல்பாக வளர்ந்த திறமை ஒன்று ஈடுசொல்ல முடியாத இலக்கியப் புலமை இரண்டு பறந்து தரை வெளியில் பாயும் ஆற்றுச் சிந்தனையை பனிமலையிலிருந்து வழிந்து விழும் அருவிச் சிந்தனையாக மாற்றிக் கொண்ட..
₹114 ₹120