Menu
Your Cart

பீமாயணம்: தீண்டாமையின் அனுபவங்கள்

பீமாயணம்: தீண்டாமையின் அனுபவங்கள்
-5 %
பீமாயணம்: தீண்டாமையின் அனுபவங்கள்
அரவிந்தன் (தமிழில்)
₹233
₹245
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தியாவில் ‘தீண்டத் தகாதவராக’ இருப்பது என்றால் என்ன? இந்தியர்களில் சிலர் பிறரைத் தொடுவதை ஏன் இழிவாக நினைக்கிறார்கள்? இந்தியாவின் மகத்தான புரட்சியாளர்களில் ஒருவரான பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் (1891 - 1956), ‘தீண்டத் தகாதவராக’ வளர்வது மற்றும் தொடர்ந்து பாரபட்சத்திற்கு ஆளாவது ஆகிய அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார். பத்து வயதில் பள்ளியில் பட்ட அனுபவம், கொலம்பியா பல்கலைக்கழகத்திலிருந்து வந்த பிறகு பரோடாவில் கிடைத்த அனுபவம், பயணத்தின்போது பெற்ற அனுபவம் என்று இவை பல விதமானவை. பல்வேறு தடைகளைத் தாண்டிய அம்பேத்கர், இந்தியாவின் அரசியல் சாசனத்தை வடிவமைத்தார். கடைசியில் புத்த மதத்தைத் தழுவினார். அவர் பெற்றது போன்ற அனுபவங்கள் இந்தியாவின் 17 கோடி தலித்துகளை இன்னமும் துரத்துகின்றன. அவர்களுக்கு இன்னமும் நீரும் தங்குமிடம் வாழ்வின் அடிப்படையான கௌரவங்களும் மறுக்கப்படுகின்றன. பர்தான் - கோண்ட் கலை மரபைச் சேர்ந்த துர்காபாய் வ்யாமும் சுபாஷ் வியாமும், பெரும் சாதனை என்று சொல்லத்தக்க இந்த நூலில், மஹாட் சத்தியாக்கிரகம் போன்ற வரலாற்று நிகழ்வுகளைச் சமகால நிகழ்வுகளுடன் ஊடாடச் செய்கிறார்கள். மரபு சார்ந்த இலக்கணங்களை மீறும் அவர்கள், காவியத் தன்மை கொண்ட தங்கள் அற்புதமான கலையின் மூலம் சித்திரக்கலை மரபுக்குப் புத்துணர்வு அளிக்கிறார்கள்.
Book Details
Book Title பீமாயணம்: தீண்டாமையின் அனுபவங்கள் (Bheemaayanam Theendaamaiyin Anubavangal)
Translator அரவிந்தன் (Aravindhan)
ISBN 9789381969137
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 108
Published On Nov 2011
Year 2012
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழ்ச் சமூகத்திடமிருந்து அங்கீகாரமோ ஊக்கமோ கிடைக்காத போதும் பெரும் உத்வேகத்துடனும் படைப்பூக்கத்துடனும் செயல்பட்ட முன்னோடிகளில் ஒருவர் கரிச்சான் குஞ்சு என்கிற ஆர். நாராயணசாமி. ‘பசித்த மானுடம்’ என்னும் நாவலுக்காகவே மிகுதியும் நினைவுகூரப்படும் கரிச்சான் குஞ்சு சிறுகதைகளிலும் குறிப்பிடத்தக்க பங்கள..
₹248 ₹275
படைப்பிலக்கியம் சார்ந்தே மிகுதியும் எழுதிவரும் அரவிந்தன் தமிழ்த் திரைப்படங்கள் குறித்தும் நிகழ்த்துக்கலைகள் குறித்தும் எழுதிய கட்டுரைகள் இவை. வெகுஜனத் திரைப்படங்களைக் கறாராக மதிப்பிடும் இந்தக் கட்டுரைகள் அவற்றின் வணிகம் சார்ந்த வரையறைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன. தமிழில் கலை சார்ந்த முயற்சி..
₹133 ₹140
இங்கிலாந்தின் வேல்ஸ் மாகாணத்தில் பேசப்படும் வெல்ஷ் மொழியில் எழுதப்பட்ட சிறுகதைகள் இவை. மொழிவழிச் சிறுபான்மை இனமான வெல்ஷ் மொழி பேசும் மக்கள் தங்கள் மொழி, பண்பாடு ஆகியவற்றில் தனி அடையாளமும் பெருமிதமும் கொண்டவர்கள். ஆங்கிலத்தின் உலகளாவிய ஆதிக்கத்தின்கீழ் முகமற்றுப்போன தங்கள் மொழியின் முகத்தை மீட..
₹86 ₹90
2003இல் கதா அமைப்பும் காலச்சுவடு இதழும் இணைந்து நடத்திய இளம்படைப்பாளிகளுக்கான சிறுகதைப் போட்டியில் தேர்வுபெற்ற முதல் 11 கதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. ஜே.பி. சாணக்யா, சல்மா, ஆதவன் தீட்சண்யா, என். ஸ்ரீராம், எச். முஜிப் ரஹ்மான், புகழ், அ. சந்தோஷ், து. முத்துக்குமார், பத்மபாரதி, இராகவன், அ. முரளி..
₹71 ₹75