Menu
Your Cart

கம்பனின் அம்பறாத்தூணி

கம்பனின் அம்பறாத்தூணி
-5 % Out Of Stock
கம்பனின் அம்பறாத்தூணி
நாஞ்சில் நாடன் (ஆசிரியர்)
₹238
₹250
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஓராண்டுக்கு முன்புவரை, கம்பனில் வழிநூல் எழுதும் உத்தேசம் எனக்கு ஏதும் இருந்ததில்லை. பேச்சிலும் எழுத்திலும் சில கம்பன் பாடல்களைக் கையாண்டதன்றி, வேறெந்தப் பெரும்பிழையும் செய்தவனும் இல்லை. 2012-ம் ஆண்டின் காரைக்குடி கம்பன் விழாத்தலைமையும் 2013-ம் ஆண்டின் அறக்கட்டளைச் சொற்பொழிவுமாக என்னை இக் கைமுக்குத் 'தண்டனையில் கொணர்ந்து நிறுத்தியுள்ளன. கம்பனில் நூற்றுக்கணக்கான வழி நூல்கள் உண்டு. மணி குறைவு, பதர் அதிகம் என்பது என் இலக்கிய விமர்சனம். ஆனால் படைப்பிலக்கியவாதி எவரும் அங்ஙனம் நூலொன்று எழுதியதாக எனக்குத் தகவல் இல்லை . அதிலும் குறிப்பாக, சொல் சார்ந்து வேறேதும் நூல் இருப்பதாக நானறியேன். கம்பன் என்பவன் சிங்கக் குருளைக்கான சிந்தனை. நான் வெறும் வெங்கண் சிறு குட்டன். என்றாலும் முயற்சி என்பது தேவ தூதர், அரசிளம் குமரர், பாரம்பரிய பண்டித வம்சாவளியினர் என்பவர்க்கு மட்டும் உரிமைத்தானது அல்ல. நான் கட்டை விரலை இழக்க விரும்பாத ஏகலைவன்.
Book Details
Book Title கம்பனின் அம்பறாத்தூணி (Kambanin Ambarathuni)
Author நாஞ்சில் நாடன் (Nanjil Nadan)
ISBN 9788184469370
Publisher விஜயா பதிப்பகம் (vijaya pathipagam)
Pages 330
Year 2019
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Literature | இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நாஞ்சில்நாடனின் கதை என்பது கண்ணால் கண்ட காட்சியையோ காதால் கேட்ட செய்தியையோ மனதால் விரித்துகொண்ட கற்பனையையோ மாத்திரம் நம்பி எழுதப்பட்ட புனைவு அல்ல. மாறாக அவருடைய கதைகளின் சாராம்சத்தில் உள்ளுறைந்திருப்பது தொன்மையான ஒரு நிலமும், அதன் மொழியும் அவற்றின் தொகை விரிவான பண்பாட்டு செழுமையும் ஆகும். பின..
₹276 ₹290
கவிமணி ஒரு ‘மான்மியம்’ படைத்தார்; நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமுதாயம் ஒரு திருப்பங்கண்டது. சமுதாயத்தை மற்றொரு திருப்பத்துக்குச் சித்தப்படுத்துவது நாஞ்சில் நாடனின் இந்த ‘இரண்டாம் மான்மியம்.’ சமுதாயத்தின் மூத்த தலைமுறையைச் சப்புக்கொட்ட வைத்து, அடுத்த தலைமுறையைச் சிந்திக்க வைத்து, இளைய தலைமுறையைச் சீ..
₹152 ₹160
இத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச் செல்பவை. ஜன்னல் இருமாத இதழில் வெளிவந்தவை. ஆகவே அனைத்துத் தரப்பு வாசகர்களுக்குமான எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை நாம் அனைவருக்கும் க..
₹114 ₹120
தலைகீழ் விகிதங்கள்நாஞ்சில் நாடனின் நாவலான 'தலைகீழ் விகிதங்கள்' உண்மையின் ரீங்காரம் நிறைந்தது. சுய அனுபவத்தை மதிக்கும் எழுத்தாளர்களிடம் மட்டுமே நாம் கேட்கும் ரீங்காரம் இது ... அவர் எதிர்கொள்ளும் வாழ்வு இன்றைய தமிழ் வாழ்வின் பிரதிபலிப்புகள் நிறைந்தது. ஜாதி, மூடநம்பிக்கைகள், வறட்டு ஜம்பம், பிற்போக்கு ஆ..
₹371 ₹390