Menu
Your Cart

நிழலின் தனிமை

நிழலின் தனிமை
-5 %
நிழலின் தனிமை
தேவிபாரதி (ஆசிரியர்)
₹209
₹220
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஓர் அபத்தமான நாள் முப்பது வருட நீட்சியுடன் முடிவடையாமல் தொடர்வது எப்படி? அது முடிவடையும் கணத்தில் மானுடக் கருணையின் மாபெரும் வெறுமை கவிவது ஏன்? இந்த இரண்டு கேள்விகளுக்கு இடையிலான பதிலைத் தேடுகிறது ‘நிழலின் தனிமை’. காமம், அதையொட்டிய அதிகாரம், அதற்கெதிரான வஞ்சினம், பழி தீர்க்கும் வெறி என்று மன இருளின் வெவ்வேறு நிற பேதங்களைச் சொற்கள் மூலம் உருவாக்குகிறது இந்த நாவல். தாம் மட்டுமே அறிந்த இருளுக்குள் தீர்மானத்துடனும் நோக்கமின்றியும் இயல்பாக நடமாடும் வெவ்வேறு பாத்திரங்கள் அந்த நிழல் நிறச் சொற்களை இயக்குகிறார்கள். வார்த்தைகளுக்குள் வசப்பட மறுக்கும் கொந்தளிப்பை காட்சிகளாகவும் அந்தக் காட்சிகளை உண்மையின் விசாரணைகளாகவும் முன்வைப்பதில் தேவிபாரதி அடைந்திருக்கும் வெற்றிக்குச் சாட்சியுமாகிறது நாவல். உள் அடுக்குகளில் நுட்பமாக நிகழும் உளவியல் அலசலும் சமூக விமர்சனமும் புனைவைக் கதை கடந்த எல்லைக்குக் கொண்டுசெல்கின்றன. மனித மனத்தின் ததும்பல்களையும் சீற்றத்தையும் பகையையும் வேட்கையையும் தந்திரத்தையும் அவமானத்தையும் தோல்வியையும் இவ்வளவு தீவிரத்துடன் வெளிப்படுத்தும் படைப்பு இது.
Book Details
Book Title நிழலின் தனிமை (Nizhalin Thanimai)
Author தேவிபாரதி (Devibharathi)
ISBN 9789380240824
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 176
Published On Nov 2010
Year 2011
Edition 2
Format Paper Back
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

புத்தாயிரம் ஆண்டின் தமிழ்ச் சிறுகதை, மரபிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டது. முந்தைய தலைமுறை எழுத்துக்களைப் போல அது வாழ்வின் மீது தீர்ப்பளிப்பதில்லை. முன்முடிவுகளும் அதற்கு இல்லை. வாழ்வை எதிர்கொள்வதில் அதற்கு ஒரு திட்டம் இருப்பதாகவும் தெரியவில்லை. முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் வாழ்வின் மீது காட்ட..
₹143 ₹150
அரசியல் விதிவிலக்கில்லாமல் எல்லோரது வாழ்வையும் பாதிக்கிறது. முக்கியமாக அது எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. அதனோடு எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ள விரும்பாதபோதும் அது எல்லோரையும் உருக்குலைக்கிறது. அரசியலற்ற ஒரு கருத்தோ செயலோ அநேகமாக இல்லை என்னும் கருத்து எந்த அளவுக்குப் பழ..
₹175
‘சமகால வரலாறு’ என்பது தமிழில் வேரூன்றாத ஓர் அறிவுத்துறை. மேலைப் பண்பாடுகளிலும்கூடச் ‘சமகால வரலாறு’ அதிகம் செழித்துள்ளது என்று சொல்ல முடியாது. கதையும் கவிதையும் நாடகமும் எழுதி நன்கறியப்பட்ட தேவிபாரதி, இரண்டு அரசியல் நிகழ்வுகளைத் தம் வாழ்க்கை அனுபவங்களோடு இணைத்துப் பதிவுசெய்துள்ளார். ஒன்று நெருக்கடி..
₹119 ₹125