Menu
Your Cart

கைலாஷ் செளதுரியின் ரத்தினக்கல்

கைலாஷ் செளதுரியின் ரத்தினக்கல்
-3 % Out Of Stock
கைலாஷ் செளதுரியின் ரத்தினக்கல்
சத்யஜித் ரே (ஆசிரியர்)
₹29
₹30
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உலகப் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட மேதை சத்யஜித் ரேவை ஓர் எழுத்தாளராகத் தமிழ் வாசகர்களுக்கு கிழக்கு அறிமுகப்படுத்துகிறது. கலைப்பட இயக்குநராக நாமறிந்த ரேயின் முற்றிலும் மாறுபட்ட மற்றொரு பரிமாணம். இதில் துப்பறியும் கதைகளுக்கும் இலக்கிய அந்தஸ்து அளித்து, பல புதிய சாத்தியங்களை உருவாக்குகிறார் சத்யஜித் ரே. இந்தக் கதைகளில் வெளிப்படும் அவருடைய எழுத்தின் வேகமும் சீற்றமும் பிரமிப்பூட்டக்கூடியவை.   1965 தொடங்கி 1992 வரை சத்யஜித் ரே எழுதிய, ஃபெலுடா வீரசாகசக் கதைகள் வங்காளத்திலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. இந்தக் கதைகளின் நாயகன் ஃபெலுடா, வங்காள இலக்கியத்தின் ஷெர்லக் ஹோம்ஸ் என அழைக்கப்படுபவர். முதல் முறையாக, சத்யஜித் ரேயின் படைப்புகள் காலவரிசைப்படுத்தப்பட்டு, தமிழில் வெளிவருகின்றன. ஃபெலுடா வீரசாகசக் கதைகளில் ‘கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல்’ மூன்றாவது புத்தகம். வேட்டைக்காரர் கைலாஷ் சௌதுரிக்கு ஒரு கடிதம் வருகிறது! ‘நிலைமையை நீயே மோசமாக்கிக் கொள்ளாதே! உனக்கு சொந்தமில்லாததை நீ திருப்பித் தந்துவிட வேண்டும். விக்டோரியா நினைவகத்துக்குச் சென்று, அதன் தெற்கு வாயிலை நோக்கியவாறு இருக்கும் அல்லிச் செடிகளின் முதல் வரிசையில் முதல் செடியின் கீழ், அதை வைத்துவிட்டுச் சென்றுவிடு. போலீஸுக்குத் தகவல் சொல்லவோ, தனியார் துப்பறியும் நிபுணரை நாடவோ முயற்சிக்காதே! முயன்றால், உன் வேட்டையின்போது நீ கொன்ற மிருகங்களின் கதிதான் உனக்கும் ஏற்படும்!’ கடிதத்தின் உள்ளடக்கம் இதுதான். எழுதியது யார்? ஃபெலுடா துப்பறியத் தொடங்குகிறார். இந்தக் கடிதத்தின் முடிவு என்ன?
Book Details
Book Title கைலாஷ் செளதுரியின் ரத்தினக்கல் (Kailash Choudriyin Rathinakkal Kzk)
Author சத்யஜித் ரே (Satyajit Ray)
ISBN 9788183688178
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 0
Year 2008

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

புராதன ஓலைச் சுவடிகளை தேடிச் சென்று சேகரிக்கும் டி.ஜி.சென்-ஐ கடந்த கால வாழ்க்கை துரத்துகிறது. கடலோர சொர்க்கமான பூரி நகரம் கொலையாளிகளின் கூடாரமாக மாறும் நேரத்தில் ஓய்வெடுக்க வருகிறார் ஃபெலுடா. ஆசை, பேராசை, நயவஞ்சகம் ஆகியவை குருட்டு நம்பிக்கை என்ற முகமூடி அணிந்து ஆடிய ஆட்டத்தை தனது மதியூகத்தால் நிறுத்..
₹76 ₹80
மகாராஜாவின் மோதிரம்புராதன காலத்து மோதிரம் ஒன்றின் மீது ஆசை கொண்டவர்கள் பலர். பந்தாகக் கைமாறிக் கொண்டிருந்த அந்த ‘மகாராஜாவின் மோதிரம்’ இப்போது எங்கே? அதை எடுத்தது யார்? துரத்தி வருபவர்களோ அதற்காக எதையும் செய்ய தயார். ஃபெலுடா தானே ஏற்றுக் கொண்ட வழக்கில், பகை உணர்வு எப்படி ஒரு மனிதனை கொலையாளி ஆக்குகிறத..
₹76 ₹80
டார்ஜீலிங்கில் ஓர் அபாயம்ஓய்வுகாலத்தை நிம்மதியாகக் கழித்துக் கொண்டிருந்த ராஜன் பாபுவிற்கு மிரட்டல் கடிதம் வந்தது ஏன்? அவரிடம் இருந்த புராதன கலைப் பொருட்களா? அல்லது பணமா? எது அந்த மிரட்டலுக்குக் காரணமாக இருந்தது? அந்தக் காரணத்தைக் கண்டறிந்ததன் மூலம் ஃபெலுடாவின் டார்ஜிலிங் பயணத்தில் அவரது துப்பறியும் ..
₹29 ₹30
காட்டுப்பகுதியில் ஓய்வெடுக்கச் சென்ற ஃபெலுடாவின் முன்னே ஒரு புதிர்.அதை விளக்கினால் வெளிவர இருந்ததோ ஒரு புராதன புதையல்.இடையே வெளிவந்தது ஓர் ஆட்கொல்லி வங்கப்புலி. ரகசியங்களை உணர்ந்து, அதன் பின்னே நிகழ்ந்த ஒரு மரணத்தையும் புலப்படுத்திய ஃபெலுடா, புதையலை எடுத்தாரா? புலியை வீழ்த்தினாரா?என்பதைக் கூறுவதுதான..
₹76 ₹80