Menu
Your Cart

சத்யஜித் ரே

சத்யஜித் ரே
-3 % Out Of Stock
சத்யஜித் ரே
சத்யஜித் ரே (ஆசிரியர்)
₹29
₹30
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உலகப் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட மேதை சத்தியஜித் ரேவை ஓர் எழுத்தாளராகத் தமிழ் வாசகர்களுக்கு கிழக்கு அறிமுகப்படுத்துகிறது. துப்பறியும் கதைகளுக்கும் இலக்கிய அந்தஸ்து அளித்து பல புதிய சாத்தியங்களை உருவாக்கியவர் சத்யஜித் ரே. 1965 தொடங்கி 1992 வரை சத்யஜித் ரே எழுதிய கதைகள் பெங்காலியிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. முதல் முறையாக, சத்யஜித் ரேயின் படைப்புகள் காலவரிசைப்படுத்தப்பட்டு, தமிழில் வெளிவருகின்றன. இந்தக் கதைகளின் நாயகன் ஃபெலுடா. அசாத்திய புத்திக்கூர்மை; தெளிவான சிந்தனை வீச்சு; குழப்பமான மர்ம முடிச்சுகளையும் திறம்பட அவிழ்க்கும் திறன். வங்காள இலக்கியத்தின் ஷெர்லக் ஹோம்ஸ் என்று ஃபெலுடாவைத் தாராளமாக அழைக்கலாம். தவிரவும், வேறெந்தத் துப்பறியும் நிபுணரிடமும் காணக்கிடைக்காத கூடுதல் திறன் ஃபெலுடாவுக்கு உண்டு. மெல்லிய நகைச்சுவை உணர்வு. டார்ஜிலிங்கில் ஆபத்து! புராதனப் பொருள்கள் மீது அபரிமிதமான காதல் அவருக்கு. தானுண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவர். எங்கிருந்தோ வந்து சேர்கிறது அந்த மிரட்டல் கடுதாசி. யார் அனுப்பியிருப்பார்கள்? யாரைச் சந்தேகப்படுவது? நண்பர்களையா? உடன் இருப்பவர்களையா? ஜிலீர் பிரதேசம். இறுகும் மர்ம முடிச்சு. விடை தேட ஆரம்பிக்கிற நூல் ஃபெலுடா. பதைக்கப் பதைக்கப் படித்துப் பாருங்கள்!
Book Details
Book Title சத்யஜித் ரே (Satyajith Re Darjeelingil Orr Abaayam Kzk)
Author சத்யஜித் ரே (Satyajit Ray)
ISBN 9788183683692
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 48
Year 2006

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

புராதன ஓலைச் சுவடிகளை தேடிச் சென்று சேகரிக்கும் டி.ஜி.சென்-ஐ கடந்த கால வாழ்க்கை துரத்துகிறது. கடலோர சொர்க்கமான பூரி நகரம் கொலையாளிகளின் கூடாரமாக மாறும் நேரத்தில் ஓய்வெடுக்க வருகிறார் ஃபெலுடா. ஆசை, பேராசை, நயவஞ்சகம் ஆகியவை குருட்டு நம்பிக்கை என்ற முகமூடி அணிந்து ஆடிய ஆட்டத்தை தனது மதியூகத்தால் நிறுத்..
₹76 ₹80
மகாராஜாவின் மோதிரம்புராதன காலத்து மோதிரம் ஒன்றின் மீது ஆசை கொண்டவர்கள் பலர். பந்தாகக் கைமாறிக் கொண்டிருந்த அந்த ‘மகாராஜாவின் மோதிரம்’ இப்போது எங்கே? அதை எடுத்தது யார்? துரத்தி வருபவர்களோ அதற்காக எதையும் செய்ய தயார். ஃபெலுடா தானே ஏற்றுக் கொண்ட வழக்கில், பகை உணர்வு எப்படி ஒரு மனிதனை கொலையாளி ஆக்குகிறத..
₹76 ₹80
டார்ஜீலிங்கில் ஓர் அபாயம்ஓய்வுகாலத்தை நிம்மதியாகக் கழித்துக் கொண்டிருந்த ராஜன் பாபுவிற்கு மிரட்டல் கடிதம் வந்தது ஏன்? அவரிடம் இருந்த புராதன கலைப் பொருட்களா? அல்லது பணமா? எது அந்த மிரட்டலுக்குக் காரணமாக இருந்தது? அந்தக் காரணத்தைக் கண்டறிந்ததன் மூலம் ஃபெலுடாவின் டார்ஜிலிங் பயணத்தில் அவரது துப்பறியும் ..
₹29 ₹30
காட்டுப்பகுதியில் ஓய்வெடுக்கச் சென்ற ஃபெலுடாவின் முன்னே ஒரு புதிர்.அதை விளக்கினால் வெளிவர இருந்ததோ ஒரு புராதன புதையல்.இடையே வெளிவந்தது ஓர் ஆட்கொல்லி வங்கப்புலி. ரகசியங்களை உணர்ந்து, அதன் பின்னே நிகழ்ந்த ஒரு மரணத்தையும் புலப்படுத்திய ஃபெலுடா, புதையலை எடுத்தாரா? புலியை வீழ்த்தினாரா?என்பதைக் கூறுவதுதான..
₹76 ₹80