Menu
Your Cart

தாயகம் மறுக்க குடியுரிமை சட்டமா?

தாயகம் மறுக்க குடியுரிமை சட்டமா?
-4 %
தாயகம் மறுக்க குடியுரிமை சட்டமா?
கி.வெங்கட்ராமன் (ஆசிரியர்), பெ.மணியரசன் (ஆசிரியர்)
₹24
₹25
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பா.ச.க. அரசு நிறைவேற்றிலள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாவட் டங்களில் நடக்கும் போராட்டங்களுக்கும் மேற்கு வங்கம், தில்லி, உ. பி. உள்ளிட்ட இதர மாநிலங்களில் நடக்கும் போராட்டங்களுக்கும் இடையே வேறுபாடு உண்டு! மேற்கு வங்கம், பீகார், ஒரிசா, வங்காள தேசம் போன்றவற்றிலிருந்து தங்கள் மாநிலங்களில் குடியேறியுள்ள இந்துக்களை நிரந்தரக் குடிமக்கள் ஆக்கப் போகிறார்களே என்ற அச்சத்தில், தங்கள் தாயகத்தைப் பாதுகாக்க வட கிழக்கு மாநிலங்களில் மக்கள் போராடுகிறார்கள். புலம்பெயர்ந்தோர்களில் இந்துக்களையும் கிறித்தவர்களையும் இந்தியக் குடியுரிமை பெற தகுதி பெற்றவர்கள் என்று கூறும் இந்திய அரசு, நாடுகள்பட்டியலில் இலங்கையைச் சேர்க்க மறுத்ததால் இந்து மதத்தைப் பின்பற்றும் - இந்து மதத்தைப் பின்பற்றுவோர் என்ற காரணத்தினாலும் விரட்டப்பட்டு தமிழ்நாட்டிற்குள் வந்த ஈழத் தமிழர்கள் இந்தியக் குடியுரிமை பெற வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஈழத் தமிழ் கிறித்தவர்களுக்கும் இதே நிலைதான்! இந்துவாக இருந்தாலும் அவர்கள் தமிழர்கள் என்பதுதான் ஈழத் தமிழர்களைப் புறக்கணிப்பதற்கு உண்மையான காரணமாகும். தமிழீழத்தின் மீது பௌத்த - சிங்கள பேரினவாத இலங்கை அரசு, இனக்கொலைப் போரை நடத்தியபோது, தமிழர்கள் பகுதியில் இருந்த முருகன் கோயில், விநாயகர் கோயில், அம்மன் கோயில்கள் போன்ற இந்து மத வழிபாட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்ட போது அன்றைய காங்கிரசு அரசும் கண்டுகொள்ளவில்லை; மாறாக, அதற்குத் துணை செய்தது! அன்றைய எதிர்க்கட்சியாக இருந்த பாரதிய சனதாவும் இந்துக் கோயில்கள் தகர்க்கப்பட்டதைக் கண்டிக்கவில்லை! காஞ்சி சங்கராச்சாரி போன்றவர்களும் கண்டிக்கவில்லை!
Book Details
Book Title தாயகம் மறுக்க குடியுரிமை சட்டமா? (Thayagam thirumba marukkum)
Author பெ.மணியரசன் (Pe.Maniyarasan), கி.வெங்கட்ராமன்
Publisher பன்மை வெளி (Panmai Veli)
Pages 32
Published On Jun 2021
Year 2020
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், Tamil Nationalism | தமிழ்த் தேசியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மதம், சாதி, பெண்னுரிமை, இந்தியம், திராவிடம், இந்தி-சமற்கிருதம், தமிழ்நாட்டு அரசியல் உள்குத்துகள், இந்திய ஏகாதிபத்தியவாத அரசு ஏவும் அன்றாட அம்புகள், சனநாயக வரம்புகள், தேர்தல் சூதாட்டம், தமிழர்கள் யார், கலை இலக்கியம் எனப் பலவகைக் கட்டுரைகள் "தமிழ்த்தேசியம் பன்முகப் பார்வை" என்ற இந்நூலில் இடம் பெற்றுள்..
₹124 ₹130
மதம், சாதி, பெண்னுரிமை, இந்தியம், திராவிடம், இந்தி-சமற்கிருதம், தமிழ்நாட்டு அரசியல் உள்குத்துகள், இந்திய ஏகாதிபத்தியவாத அரசு ஏவும் அன்றாட அம்புகள், சனநாயக வரம்புகள், தேர்தல் சூதாட்டம், தமிழர்கள் யார், கலை இலக்கியம் எனப் பலவகைக் கட்டுரைகள் "தமிழ்த்தேசியம் பன்முகப் பார்வை" என்ற இந்நூலில் இடம் பெற்றுள்..
₹143 ₹150
தமிழ் இனத்திற்குள் புரையோடி நீடிக்கும் சாதிய ஒடுக்குமுறைகளை மூடிமறைக்க புரட்சிகரத் தமிழ்த்தேசியம் ஒருபோதும் முயலவில்லை. தங்கள் உடலில் ஏற்பட்ட ஒரு நோயை நீக்க மக்கள் எப்படி முயல்வார்களோ அப்படித்தான் புரட்சிகரத் தமிழ்த் தேசியம் தனது இனத்தைத் தின்று கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க முயல்கிறது. தமிழர் என்..
₹124 ₹130
இந்தியத்தேசிய ஊர்தி மேல் ஏறிவரும் இந்துத்துவா என்ற ஆரியத்துவாவைத் தடுத்திட, முறியடித்திடத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்த்தேசியமே முதன்மையான தத்துவமும், அரசியலும் ஆகும். ஆரியத்துவா பகவத் கீதையை முன் வைக்கிறது நாம் திருக்குறளை முன் வைக்கிறோம். இந்தித்தேசியம் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை முன்வை..
₹143 ₹150