Menu
Your Cart

தோன்றியதென் சிந்தைக்கே

தோன்றியதென் சிந்தைக்கே
-5 %
தோன்றியதென் சிந்தைக்கே
வெ.இறையன்பு (ஆசிரியர்)
₹276
₹290
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வாழ்க்கை எண்ணற்ற அதிசயங்களையும் அற்புதங்களையும் தன் முந்தானையில் முடிந்து வைத்திருக்கிறது. கற்றுக் கொள்வதற்குத் தயாராக இருப்பவனுக்குப் புல் கூடப் போதி மரமாகி விடுகிறது. நாம் கண்களையும் காதுகளையும் திறந்துை வக்கத் தெரிந்திருந்தால் நம் புலன்களுக்கு இதுவரை தட்டுப்படாத காட்சிகளும், ஓசைகளும் கேட்கத் தொடங்கிவிடும். நம் ஒவ்வொரு நொடியும் உன்னதமானது. உலகத்திலேயே அரிய சொத்து நேரம் மட்டுமே.சேர்த்து வைக்கமுடியாத சொத்து நேரம். ஓய்வு நேரங்களில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது சில சிந்தனைகள் சிறகடிப்பதுண்டு. அவற்றையும் 'சிந்தித்தவை' எனப் பதிவுசெய்யலாம் எனத் தோன்றியது. கதம்பம் போல 'சிந்தித்தவை, சந்தித்தவை, படித்தவை, பார்த்தவை, ரசித்தவை' என்று வாரந்தோறும் தொடராக எழுதியபோது எனக்கே அது சிலிர்ப்பான அனுபவமாக இருந்தது. வாசிக்க எளிமையாக இருக்கும் இந்நூல் ஒரு தேநீர் மேசைப் புத்தகம்' மட்டுமே என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
Book Details
Book Title தோன்றியதென் சிந்தைக்கே (thondriyathen-sinthaikke)
Author வெ.இறையன்பு (V. Iraiyanbu)
Publisher கற்பகம் புத்தகாலயம் (karpagam puthagalayam)
Pages 304
Published On Mar 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உள்ளொளிப் பயணம்குட்டிக்கதைகள் மற்றும் சிறுசிறு நிகழ்வுகளுடன் அறிவார்ந்த விஷயங்கலையும் நல்ல கலையம்சத்துடன் வெளிப்படுத்தும் இந்நூல் படிப்பதற்கும் படிப்பினைக்கும் உரிய நூல்.உள்ளொளி என்பது அறிவாகவும், அன்பாகவும் கருணையாகவும் மனசாட்சியாகவும் மன உறுதியாகவும் விழிப்புணர்வாகவும் உள்ளுணர்வாகவும், இயற்கை மீதா..
₹314 ₹330
படிப்பது சுகமே!படிப்பது பாரம் என்பதை மாணவர்கள் நினைத்து அச்சமடையாமல் படிப்பது ‘சுகம்’ தரும் ஒன்றாகும் என்பதை விளக்கமாகவும் சுவையாகவும் கூறியுள்ளார். பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் தங்களை எப்படித் தயார் செய்துகொள்ள வேண்டும், பாடங்கள் எப்படி உள்வாங்கிக் கொள்ள வேண்டும் எனப் பல விஷயங்களைப் பற்றியும் மாணவர்..
₹95 ₹100
மென் காற்றில் விளை சுகமே!வழிகேட்கும் ஒருவரின் கையைப் பிடித்துக் கூடவே அழைத்துக்கொண்டு போய் இடத்தை காட்டிச் செல்லும் சில நல்லிதயங்களும் இருக்கத்தான் செய்கின்றன.அதில் வெ.இறையன்புவும் ஒருவர்.வாழ்விடம் தேடுவோர் மற்றும் சோந்து கிடக்கும் இதயத்திற்குள் தன்னம்பிக்கையூட்டி வாழ்வில் வெற்றியை பெறுவதற்கான ஒரு ..
₹138 ₹145
ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்இக்காலத்தில் ஐ.ஏ.எஸ். ஆவது எத்தனை எளிது என்பதை எடுத்துரைக்கும் நூல். கல்வித்திறனுடன் தேடலும், முயற்சியும், கடினமான உழைப்பும், செயல்படுதிறனும் ஒருங்கே அமையப் பெறுவதற்கு இந்நூல் பல வழிமுறைகளை எடுத்துரைக்கிறது. இதனை புரிந்துகொண்டு செயல்படும் அனைவரும் ஐ.ஏ.எஸ். தேர்வில் சாத..
₹1,045 ₹1,100