Menu
Your Cart

அ.மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் (பாகம் 3)

அ.மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் (பாகம் 3)
-5 %
அ.மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் (பாகம் 3)
அ.மார்க்ஸ் (ஆசிரியர்)
₹133
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பாஜக அரசு முதன் முதலில் ஆட்சி அதிகாரத்தை அடைந்தபோது (2014) தேச ஒற்றுமைக்கான புதிய திட்டம் என ஆர்.எஸ்.எஸ் முதலான இந்துத்துவ அமைப்புகளின் தரப்பிலிருந்து உடனடியாகச் சில கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை நீக்குவது, பொது சிவில் சட்டத்தை உருவாக்குவது என்பன அவற்றின் அடிப்படைகளாக இருந்தன. “கருத்தியல், மதவியல் மற்றும் சமூக வேறுபாடுகளைப் புறந்தள்ளித் தேச ஒற்றுமைக்கான சூழலைப் புதிய அரசு உருவாக்க வேண்டும்” என இன்னொருபக்கம் முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. ஆர்.எஸ்.எஸ்ஸின் அப்போதைய மூத்த தலைவர்களான சுரேஷ் ஜோஷி முதலானோர் வெளிப்படையாக முன்வைத்த இக் கருத்துகளை மேலோட்டமாகப் பார்க்கும்போது இதில் பெரிதாக ஒன்றுமில்லை எனத் தோன்றலாம். ஆனால் இது இந்திய அரசின் அடிப்படை அணுகல் முறைகளை முற்றாக மறுதலிக்கும் ஒரு கருத்து எனவும், ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என அதுவரை இந்திய அரசின் அடிப்படை அணுகல்முறையாக இருந்ததற்கு இது முற்றிலும் எதிரானது என்பதும் அப்போதே நடுநிலையாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டன. “இங்கு வேற்றுமைகளே இருக்க இயலாது. யாரெல்லாம் தனது தந்தையர் பூமியை மட்டுமல்ல புண்ணிய பூமியையும் இந்தியாவில் காண்கின்றனரோ அவர்களே இந்த நாட்டுக்குரியவர்கள்” என்பதெல்லாம் சாவர்கர் முதலான இந்துத்துவத் தீவிரவாதிகள் முன்வைத்த முழக்கம். இங்குள்ள சிறுபான்மையினரை ஒதுக்கும் இந்துத்துவ பாசிச அரசியலின் குரல் இது என்பதை அக்கறையுள்ள நடுநிலையாளர்கள் அழுத்தமாகப் பதிவு செய்தனர். இப்படி முன்வைக்கப்பட்ட ஆதாரபூர்வமான மாற்றுக் கருத்துகள் எதற்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பதில் சொன்னதில்லை. சொல்லவும் முடியாது. பதிலாக மேலும் மேலும் இஸ்லாமியச் சிறுபான்மையர் முதலானோரை இலக்காக்கித் தம் பிளவுவாத அரசியலை மேலும் தீவிரமாக்கி வரும் ஆபத்து தொடர்கிறது.
Book Details
Book Title அ.மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் (பாகம் 3) (A.maarks therivu seiyapata padaipugal part 3)
Author அ.மார்க்ஸ் (A.Marx)
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Year 2024
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், Essay | கட்டுரை, 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

குற்றம் தண்டனை மரண தண்டனைஅஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதன் பின்னணியில் உள்ள விஷயங்கள், மரண தண்டனை கொடிய குற்றங்களுக்கு எதிரான அச்சுறுத்தும் கருவி என்பது உண்மைதானா போன்ற விவாங்கள் இதில் உள்ளன.தூக்கிலிடப்படுபவர்கள் பெரும்பாலும் அடித்தளத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது மரணத்தால் துன்புற..
₹95 ₹100
காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் பலதரப்பு மக்களையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கக்கூடிய பார்வை இந்திய வரலாற்றில், குறிப்பாக சென்ற நூற்றாண்டு வரலாற்றில் காந்தியின் அளவுக்கு யாரிடமும் இல்லை. இந்தியாவை எந்த ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான தேசமாகவும் அவர் பார்க்க வில்லை. பல்வேறு சிற..
₹143 ₹150
கால்டு​வெலின் திராவிட ​மொழிக்குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பும் சிந்து சம​வெளி அகழ்வுகள் ​வெளிப்படுத்திய உண்​கைளும் ​சென்ற நூற்றாண்டில் தமிழக அரசிய​லை பாதித்த இரு முக்கிய நிகழ்ச்சிகள். இதன் மூலம் எழுச்சி ​​​கொண்ட பார்ப்பன எதிர்ப்பு அரசியலின் வீச்சில் ஓராண்டு காலம் ஓய்ந்து கிடந்த தமிழகப் பார்ப்பனர்கள் ..
₹95 ₹100
கரையும் நினைவுகள்..
₹109 ₹115