Menu
Your Cart

பெருந்தலைவரின் நிழலில்

பெருந்தலைவரின் நிழலில்
-5 %
பெருந்தலைவரின் நிழலில்
பழ.நெடுமாறன் (ஆசிரியர்)
₹570
₹600
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான காமராசரின் அருமை பெருமைகளை, சாதனைகளைச் சொல்லும் நூல். மிக எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவர், அகில இந்திய அளவில் பெரிய தலைவராக உயர்ந்ததன் பின்னணியில் இருந்த அவருடைய நற்பண்புகள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. 1954 இல் தமிழக முதல்வராக பதவியேற்ற காமராசரின் காலத்தில் தான் 11 ஆம் வகுப்பு வரை இலவச் கல்வி அளிக்கப்பட்டது. 1954 இல் பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை 45 சதவீதமாக இருந்தது. காமராசரின் பதவிக் காலத்தில் அது 77.3 சதவீதமாக உயர்ந்தது. அவர் ஆட்சிக் காலத்தில்தான் தமிழ்நாட்டின் 13,638 கிராமங்கள் மின் வசதி பெற்றன. நெய்வேலி பழுப்பு நிலக்கரி திட்டம், பெரம்பூர் தொடர் வண்டித் தொழிற்சாலை, சேலம் உருக்குத் தொழிற்சாலை உட்பட பல அரசு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. ராயல் என்பீல்டு, அசோக் லேலண்ட், டி.ஐ. சைக்கிள் உட்பட பல தனியார் தொழிற்சாலைகள் தொடங்க ஊக்கம் அளிக்கப்பட்டது. மணிமுத்தாறு அணை, அமராவதி அணை, வைகை அணை, பரம்பிக் குளம் - ஆழியாறு அணை உள்ளிட்ட பல அணைகள் கட்டப்பட்டன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயம் செழித்தது. இவ்வாறு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற, மிகவும் திட்டமிட்டுச் செயலாற்றிய காமராசர், கடைசி வரை எளிய வாழ்க்கை வாழ்ந்தார் என்பதும், ரேஷன் அரிசியில்தான் அவருக்கான உணவு சமைக்கப்பட்டது என்பதும், சொந்தவீடு எதுவும் அவருக்கில்லை என்பதும், ஏழை மக்களின் தொண்டராகவே கடைசி வரை அவர் வாழ்ந்தார் என்பதும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் தொடர்புபடுத்திப் பார்க்கும்போது நம்மை நெகிழ வைக்கின்றன.
Book Details
Book Title பெருந்தலைவரின் நிழலில் (perunthalaivarin-nizhalil)
Author பழ.நெடுமாறன் (Pazha.Nedumaran)
Publisher தமிழ்க்குலம் பதிப்பாலயம் (Tamizhkulam Pathippalayam)
Pages 656
Year 2017
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், Essay | கட்டுரை, Diary & Memoir | நாட்குறிப்பு, Tamil Nationalism | தமிழ்த் தேசியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மனித குலமும் தமிழ்த் தேசியமும்தமிழினம் ஒரு தொல்லினம் மட்டுமல்லாமல் செழுமையான பண்பாட்டுப் பரப்பை உருவாக்கி அதன் மீது ஒரு சீரிய நாகரிகத்தையும் உருவாக்கி உலகனைத்தும் தன் இருப்பை நிலைநிறுத்தி இருப்பதுவுமாகும்.இன்று தேசிய இனங்களின் வாழ்வும் சுயநிர்ணய உரிமையும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இந்நிலைய..
₹86 ₹90
சிந்துவெளி நாகரிகம் கண்டறியப்பட்டு ஏறத்தாழ 98ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. தற்காலத்திலிருந்து நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த நாகரிகத்தைப் படைத்தவர்கள் யார்? அம்மக்கள் பேசிய மொழி எது? சிந்துவெளிக் குறியீடுகள் சொல்லும் செய்தி என்ன? என்பது போன்ற பல அடிப்படையான கேள்விகளுக்குரிய விடைகளைத் தேடுவதில் ..
₹171 ₹180
பிரபாகரன் பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்னால், முதன்முதலாகப் புத்தகம் எழுதியவர் பழ.நெடுமாறன். இன்று முழுமையான புத்தகம் கொடுத்திருப்பதும் அவரே. பிரபாகரன் குறித்து எழுதுவதற்கும் பேசுவதற்கும் சொல்வதற்கும் உரிமையுள்ள சிலர்தான் தமிழகத்தில் உண்டு. அதில் முதன்மையானவர் நெடுமாறன். வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளை..
₹950 ₹1,000