தமிழீழத்தில் தனது ஓவியங்களை மக்களின் காட்சிக்கு வைத்தும், அவர்களின் மன உணர்வுகளை நேரில் தெரிந்து கொண்டும் குருதியால் சிவந்த அந்த மண்ணில் பயணம் செய்தும் அவர் கண்டறிந்த உண்மைகளை நூலாக வடித்துள்ளார். தமிழீழத்திற்குச் சென்று உண்மைகளை அறிய வேண்டும் என்று துடித்துக் கொண்டிருப்பவர்கள் இந்நூலினைப் படிப்பார்..
தமிழீழ போராட்டம் 2009 இல் ஒரு இனவழிப்பு ஊடாக அழிக்கப்பட முன்னர், அங்கு வளர்ந்து வந்து கொண்டிருந்த தமிழ் பெண் பொதுவழியை வரலாற்று பார்வை ஊடாக விபரிக்கிறது இந்நூல். பெண்ணியத்தின் ஆரம்பகால கொள்கைகளை நவதாராளவாதம் விழுங்கி திசைதிருப்பி விட்ட இக்காலத்தில், பெண்ணியத்தின் அடிப்படைகளை பெண் பொதுவெளி என்ற கண்ணோ..
'திருமதி. பெரேரா' எனும் இந்த நூலை முழுமையாக வாசித்து முடிக்கும்போது சிறுகதைகளால் பின்னப்பட்ட ஒரு நாவலைப் போல நீங்கள் உணரக் கூடும். காரணம், ஒரு சிறுகதையில் சிறு கதாபாத்திரமாக வந்து போகும் நபர், அடுத்தடுத்த சிறுகதைகளில் பிரதான கதாபாத்திரமாக தனது கதையைச் சொல்லியிருப்பார். இந்தக் கதாபாத்திரங்களோடு கைகோர..
தமிழக தலித் இலக்கியத்திற்கே வழிகாட்டியவர்கள் டேனியல் போன்ற ஈழத்து தலித் எழுத்தாளர்கள்தான். பெரும்பாலான தலித் எழுத்துக்கள் தன் வரலாறாகத்தான் படைக்கப்படுகின்றன. 1980களில் மராட்டியம் இதற்கு வழிகாட்டியதாகக் கூறப்படுகிறது. ஆனால் 1951ல் தமிழில் எழுதப்பெற்ற தலித் பதிவை வாசிக்கும்போது தமிழ் தான் அதற்கு முன்..
யோகரட்ணம் அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள சண்டிலிப்பாய் எனும் சிறு கிராமத்தில் உள்ள ‘கல்வளை கேணிக்கட்டு’ எனும் குறிச்சியில் இராமன். அன்னம் தம்பதிகளின் நான்காவது பிள்ளையாக 1952 ஆம் ஆண்டு பிறந்தவர். சிறுவயதிலிருந்தே, சமூக, அரசியல் விவகாரங்களில் ஈடுபடுவதற்கான சூழலுள்ள உள்வாங்கப்படும் இயல்பை “தீண்டாமைக் கொடு..
யுத்தம், பேரழிவு, அகதி வாழ்வு, இயக்கங்கள் மீதான் விமர்சனம், போராடும் வேட்கை, அலைந்துழலும் புலம்பெயர் துயர், தாயகத்தினுள் படும் அல்லல், விடுதலைக்காய் ஏங்கும் கதியற்ற தமிழ் அறமென இத்தொகுப்பின் கதைகள் ஒவ்வொன்றும் ஏதோவொரு வகையில் ஈழ நிலத்தின் உளவியலை அதனதன் நியாயங்களோடு புனைவின் துணை கொண்டு நிலைநிறுத்து..
யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகத்தில் துர்க்கை வழிபாடு பெற்றுள்ள மாபெரும் எழுச்சி நம் அனைவருக்குமே புதிய ஒன்றுதான்..... 'துர்க்கையின் புதுமுகம்' தமிழக ஆய்வாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பொது வாசகர்களுக்கும் ஒரு புதிய வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கும். இந்நூலின் ஆய்வுப் பொருள் மிக முக்கியமானது. தமிழ்ச் சமூகத..